<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9.2" -->
<rss version="0.92">
<channel>
	<title>Siththan.com</title>
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 25 Feb 2010 12:07:33 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>கந்தர் கலிவெண்பா – 25</title>
		<description><![CDATA[25.அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய் &#8211; முன்னர்
அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் &#8211; குறுமுறுவற்
கன்னியொடுஞ் சென்று (அ)வட்குக் காதலுருக்காட்டுதலும்
அன்னவள்கண் டவ்வுருவ மாறினையுந் &#8211; தன்னிரண்டு
கையா லெடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து
மெய்யாறு மொன்றாக மேவுவித்துச் &#8211; செய்ய
அன்னவள் = கங்கை
சரவணத்தில் = சரவணப் பொய்கையில்
சரவணம் = நாணல்
சென்னி = தலை, நாணல் முனை
திருவுருவாய் = திருவடிவு எடுத்து
அறுமீன் = ஆறு நற்சேத்திரப் பெண்களாகிய கார்த்திகைப் பெண்டிர்
நறுநீர் = கங்கை
குறுமுறுவல் = புன்சிரிப்பு
கன்னி = [...]]]></description>
		<link>http://siththan.com/archives/1337</link>
			</item>
	<item>
		<title>யாரோ சொன்னது &#8211; 25-30</title>
		<description><![CDATA[25. &#8220;சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன.&#8221;
26. &#8220;உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்; நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.&#8221;
27. &#8220;மன உறுதியைப்போல் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்.&#8221;
28. &#8220;உண்பதற்காக வாழாதே! வாழ்வதற்காக உண்.&#8221;
29. &#8220;நட்பு உண்டாக அன்பு மட்டும் போதாது; இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்.&#8221; 
30. &#8220;எழுதுவது அருமை; எழுதியதைப் பழுதறக் கற்றல் அதிலும் அருமை; அதன்படி நடத்தல் அருமையோ அருமை.&#8221;
]]></description>
		<link>http://siththan.com/archives/1334</link>
			</item>
	<item>
		<title>கந்தர் கலிவெண்பா &#8211; 24</title>
		<description><![CDATA[24.திருமுகங்க  ளாறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த்தீப் பொறியா றுய்ப்ப &#8211; விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர்கண் டஞ்சுதலும்
பொங்கு தழற்பிழம்பைப் பொற்கரத்தால் &#8211; அங்கண்
எடுத்தமைத்து வாயுவைக்கொண் டேகுதியென் றெம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் &#8211; அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதியெனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் &#8211; போதொருசற்(று)
செந்தழற்கண் = சிவந்த அக்கினி தேவனிடத்தே
உய்ப்ப = செலுத்த
அடுத்ததொரு பூதம் = வாயுவுக்கு அடுத்த பூதமாம் தீ
அதன் தலைவன் = தீக்கடவுள்
கொடுபோதி = கொண்டு போவாய்
பகீரதி = பகீரதனால் கொண்டுவரப்பட்ட கங்கை
உய்ப்ப = செலுத்த
போது = [...]]]></description>
		<link>http://siththan.com/archives/1332</link>
			</item>
	<item>
		<title>யாரோ சொன்னது &#8211; 24</title>
		<description><![CDATA[24. &#8220;நாளைய நன்மைக்காக இன்றைய தேவைகளைக் குறைத்துக் கொள்.&#8221;
25. &#8220;சீரிய எண்ணங்களைச் செயல்படுத்தும்பொழுது அவை சிறந்த செயல்களாகின்றன.&#8221;
]]></description>
		<link>http://siththan.com/archives/1330</link>
			</item>
	<item>
		<title>பிரபுலிங்க லீலை &#8211; 2.45</title>
		<description><![CDATA[வாணாசுரனும் பானுகம்பனும் பேரொளி யுண்டாக்குதல்
*************************************************
2.45 பெய்யு மாமழை முகிலெனப் பெரியவாய் முழவம்
துய்ய மாமதி அனையவெண் சுரிமுகச் சங்கம்
ஐய வாணனும் பானுகம் பப்பெய ரவனும்
கையும் வாயுமொத் ததிர்த்தனர் செவிகரங் கவிழ்ப்ப.
முழவம் &#8211; குடமுழா என்னும் வாத்தியம்.
துய்ய- களங்கமற்ற.
சுரிமுகச் சங்கம் &#8211; சுழிந்த முகங்களையுடைய சங்கம்.
ஐயவாணன் &#8211; அழகிய வாணாசுரன்.
அதிர்த்தனர் &#8211; முழக்கினர்.
செவிகரம் கவிழ்ப்ப &#8211; காதுகளைக் கையினாலே மூடிக் கொள்ள.
பெரிய மழை பொழியவைக்கும் மேகங்கள் போன்ற வாயுடையது முழவம். வெண்ணிற முழுமதியென வெண்மை நிறத்தையுடைய சுழிபோல் வளைந்த முகங்களையுடைய [...]]]></description>
		<link>http://siththan.com/archives/1327</link>
			</item>
</channel>
</rss>
