பிரபுலிங்க லீலை-1.21
பிரபுலிங்க லீலை ******************** 1.21 ஆக்குறுஞ் செயல தொன்றே அயன்றனக் காக்க லோடு காக்குறுஞ் செயலி ரண்டுங் கண்ணனுக் காக்கல் காத்தல் போக்குத லென்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன். அல்லமதேவன் முத்தேவர்களையும் அதிகாரத்தில் நிறுத்தியது ஆக்குறுஞ்செயல் – படைக்குந் தொழில், காக்குறுஞ் செயல் – உலகினைப் பாதுகாக்குந் தொழில். போக்குதல் – அழித்தல். புராந்தகன் – புரத்தைச் சுட்டெரித்தழித்த உருத்திரன். நீக்கரும் – யாவரானும் மாற்றப்பெறாத, இறைமை [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





