சிவவாக்கியர் – 6
ஞான நிலை ****************** 6.நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய் யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே. மாயை நினைப்பு, மறப்பு ஆகியவைகளாக இருக்கின்றது. அதை மாய்த்து நினைப்பது ஒன்றும் கண்டிலேன். நான் காண்பதெல்லாம் நீயே அல்லாது வேறு எதுவுமில்லை. ஆதியாய், அனாதியாய், அகண்டமாய், அனைத்துமாய் இருக்கும் உனக்குள் நான்,எனக்குள் நீ நிற்கும் வழிஎப்படி?
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none





