ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சிவவாக்கியர் – 6

ஞான நிலை ****************** 6.நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமா யகண்டமா யனாதிமுன் னாதியாய் யெனக்குள்நீ யுனக்குள்நா னிற்குமாற தெங்கனே. மாயை நினைப்பு, மறப்பு ஆகியவைகளாக இருக்கின்றது. அதை மாய்த்து நினைப்பது ஒன்றும் கண்டிலேன். நான் காண்பதெல்லாம் நீயே அல்லாது வேறு எதுவுமில்லை. ஆதியாய், அனாதியாய், அகண்டமாய், அனைத்துமாய் இருக்கும் உனக்குள் நான்,எனக்குள் நீ நிற்கும் வழிஎப்படி?

ஞானக் குறள்-(201-210)

  3. தன்பால் ************ 21. குருவழி (201-210) ***************************   201. தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள் அன்பா யிருக்கு மரன்.   தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் தவசிகளின் நினைவில் அரனாகிய சிவம் நிலைத்து நிற்கும்.     202. சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம்.   சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தனையானது சிவம் செய்யும் சிந்தனையாக மாறிவிடும்.   மணிவாசகப் பெம்மான் (திருவாசகம்):   “சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் [...]