ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

பிரபுலிங்க லீலை-1.15

பிரபுலிங்க லீலை ******************** 15. புறங்கறை ஒழுகுசெம் புண்ணில் ஈயென வருங்கதை புல்லியர் கொள்வர் மாமலர் உறுங்களி வண்டினல் லமனொண் காதையைப் பிறந்துள பயன்பெறு பெரியர் கொள்வரே. வெளிப்பக்கத்தே குருதி(கறை) ஒழுகும் ஆறாத புண்ணில் ஈ மொய்த்தது போல் இழிந்தோர்(புல்லியர்) வெறுங்கதை (வருங்கதை) பேசுவர். ஆனால், பிறந்ததன் பயனை (பிறந்துள பயன்பெறு) அடைய நினைக்கும் பெரியவர்கள், மலரில் தேனுக்கு மொய்க்கும் வண்டினம்போல் அறநெறி நூலாம் அல்லம காதையைச் சிறப்பாகக் கொண்டு, கற்று, உணர்ந்து அதன்படி நடப்பர்.