பிருங்கி முனிவர் மகிழல்
2.43 ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம் மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல் தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப் போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன். ஊன்று – உறுதியாகத் தாங்கப்பெற்ற. வயிராகம் – வைராக்கியம், உறுதி. முறுவல் – புன்னகை. புனிதன் – தூயோன். ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் [...]
Posted: November 22nd, 2009 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





