ஞானக் குறள்-(271-280)
3. தன்பால் ************* 28. ஞானம் பிரியாமை (271-280) ********************************************** 271. பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். ஞானவினைக்கு வேண்டிய தத்துவங்கள் வெளிப்படுமிடம், திருமால் வாழும் மணிபூரகமாகிய உந்திக் கமலமே. அவ்விடத்தைத் திறக்காமலிருப்பின், நாம் இறந்தபின் சேரவேண்டியது வன்னியாகிய அக்கினியிடமே. 272. சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. இறவாது தடுக்கும் பொருள்களின் இருப்பிடமே மவுனமாகிய நாபிக்கமலம்தான். அங்கே, நோக்கைக் கருத்துடன் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





