சிவவாக்கியர்-4
வேத நிலை ****************** 4.வடிவு கண்டுகொண்ட பெண்ணை மற்றொருவ நத்தினால் விடுவனோ லவளையின்னம் வெட்டவேணு மென்பனே நடுவன் வந்தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல் சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகை கொடுப்பரே. மாயை என்னும் அழகிய பெண்ணை ஞானவினையாம் வாசி யோகத்தால் வெட்டி விட்டு கருத்தில் கலக்கும் நேரத்தில், அதைக் கெடுக்கத் திரும்பி வரும் மாயையை விடுவனோ? விடாமல், திருப்பியும் முன் செய்தவாறே வெட்ட வேண்டுமென்பேன். இல்லையெனில், நடுவனாகிய ஏமன் வந்து அழைக்கும்போது நாறிச் செத்த இந்த உடலை, மற்றவர்கள் சுடலையில் [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none
ஞானக் குறள்-(161-170)
2.திருவருட்பால் ************************** 17.உருபாதீதம் (161-170) *********************************** 161. கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. உடலைத் தன் வயப்படுத்தியிருக்கும், கருவாகிய மனம், புத்தி, சித்த, ஆங்காரம் இல்லாது, எண்ணமாகிய கருத்தை நினைவில் அசைவற்று நிறுத்த, அவ்வுடலில் (மோட்ச வீடு) அறிவாகிய உணர்வு உருவற்ற நிலையில் நிற்கும். 162. பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. பிறப்பித்த அந்தக்கரணங்கள் ஒன்றுமில்லாமலும், மற்றபடி உற்பத்தி ஆகாமலும் செய்யவேண்டுமானால், அதற்கு மூலகாரணமான சக்திகளை அவை தங்கியிருக்கும் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4
ஞானக் குறள்-(111-120)
2.திருவருட்பால் ************************* 12.நினைப்புறுதல் (111-120) *************************************** 111. கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. அசைவையொழித்துப் (கலங்காமல்) பார்வையால் உள்ளத்தில் எண்ணங்களை நிலைநிறுத்திக் கருத்தினில் சதா சதாசிவனை நினை. 112. குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். ஓங்காரமாம் பிரணவத்தின் நடுவில் முக்கலையொன்றி அதன் மேல் ஊன்றிப்பார். வாசிட்டம்: “ஆந்திர வேட்டனிகை யென்றோர் தனிநாடி நாடி கணூரணுகி நிற்கும் வாய்ந்தவிசை வீணையுடல் வட்டம்போனீர்ச் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





