ஞானக் குறள்-(201-210)
3. தன்பால் ************ 21. குருவழி (201-210) *************************** 201. தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள் அன்பா யிருக்கு மரன். தன்னைத்தான் அறியும்படியான அகத்தவத்தைச் செய்யும் தவசிகளின் நினைவில் அரனாகிய சிவம் நிலைத்து நிற்கும். 202. சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில் சிந்தித் திருக்குஞ் சிவம். சிவத்தையே சிந்தித்திருக்கும் தவஞானிகளின் சிந்தனையானது சிவம் செய்யும் சிந்தனையாக மாறிவிடும். மணிவாசகப் பெம்மான் (திருவாசகம்): “சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: none





