ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

கந்தர் கலிவெண்பா – 2

2.அந்தங் கடந்தநித் தியானந்த போதமாய்ப் பந்தந் தணந்த பரஞ்சுடராய் – வந்த குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்குஞ் செறியும் பரம சிவமாய் – அறிவுக்(கு) நித்தியானந்தம் = நித்திய (நிலைத்த) ஆனந்தம் பந்தம் = (வினைப்) பாசம் தணந்த = இயல்பாக நீங்கிய குறி = பெயர் கோலம் = வடிவு, அழகு, உருவம் அற்று = இல்லாது அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு முதல், நடு, முடிவு ஆகியவை இல்லாத, என்றும் நிலைத்த இன்ப அறிவுடையவனே! [...]

ஞானம் எட்டி-29

29.நடுவணை தனிலேறி சிவசிவ …….. நாடிய குண்டலி வட்டத்துள்ளே அடிநடு முடியறிந்து சுடரதில் …….. அனுதினம் வாசிகொண் டமிர்தமுண்டு படியறிந் திசைநாதம் சிவசிவ ……. பத்துமொரு மித்துவரு பழக்கமதால் வடிவுள்ள செகசோதி கமலமலர் …… வந்துபணிந் தவனான் காணும். நடுவணை – நடுத்தண்டாம் முதுகு எலும்பு, பரவெளி, இடைவெளி. படி – விதம் சிவசிவ எனும் மந்திரத்தை நாடி ஓதி வட்டமாம் மண்டைக்குள்ளே, தினம்தோறும் குண்டலியின் அடி நடு முடி கண்டு, வாசி எனும் உயிர்(மூச்சு)க் காற்று [...]