பழமொழி 600
484.நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? 485.நச்ச வாயன் வீட்டிலே நாறும் வாயன் பெண் எடுத்தது போல் 486.நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான். 487.நம்பமாட்டாதவன் பெண்டாட்டிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளை. 488.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை. 489.நாணமில்லா நாகுவுக்கு நாலு திக்கும் வாசல்படி 490.நான் படும் பாடு நாய்தானும் படாது. 491.நித்திய கண்டம் பூரண ஆயுசு 492.நிறைகுடம் தளம்பாது. 493.நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல். 494.நிழலின் அருமை வெய்யிலில் தெரியும். [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





