மனத் தூய்மை
அமைதியை அடைய மனத் தூய்மை அவசியம். மனத் தூய்மை இருப்பின் அமைதியைத் தேடிப் போகவேண்டாம். உனக்கு அமைதி தானே கிட்டும். எவருக்கும், எதற்கும் உன்னால் தீங்கு உண்டாகாது. உன்னிடம் தீமையற்ற தூய்மை இருப்பின் உலகை வசமாக்கலாம். மிகக் கொடிய மிருகங்கள்கூட உன்முன் அமைதியாய் இருக்கும். உன் பார்வையில் எல்லாம் ஒன்றாகத் தோன்றும். அப்பொழுது உனக்கு கொல்லாமை கைவரப்பெறும். பின்னர் காணும் உயிர் அனைத்திலும் உன்னைக் காண்பாய். இந்நிலையடைய மனத் தூய்மை கட்டாயம் வேண்டும்.
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம், தமிழமுது.
Comments: none





