ஞானம் எட்டி-55
55.தன்னையினிதானறியார் தலமுங்காணார் தான் ………….பிறந்த சரித்திர முந்தடமுங் காணார் இன்னதென்று வேதமறைவழியுங்காணா ரிடும்ப ………….ரெல்லாம் வாய்மதத்தாலிகழ்ச்சி சொல்வார் பின்னையொருபொருளறியார் தவத்தைக்காணார் …………..பிதற்றுகின்றபேயர்கள்தன் பெருமைபேசி என்னைத்தான்பறையனென்று தள்ளினார்க ளென் …………..பிறப்பைச்சபைதனிலே யியம்புவேனே. தன்னைத் தானே அறியாதோர், தானாகிய சீவனிருக்கும் இடத்தைக் காண இயலாதோர், தான் பிறந்த வழியையும் வரலாற்றையும் உணராதோர், இதுதான் வழி என வேத நெறிகளில் கூறியுள்ளதைப் புரிந்து அதன் வழி செல்ல இயலாதோர், செருக்கு (இடும்பு) நிறைந்தோர் எல்லாம் வாய்க்கொழுப்பால் என்னை இகழ்வோர், அப்புறம் ஒரு [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none





