பழமொழி 600
459.தடியெடுத்தவன் தண்டக்காரன். 460.தனக்கு அழகு மொட்டை; பிறருக்குக் கொண்டை. 461.தனக்கு என ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் குந்தி அழுவாள். 462.தனிமரம் தோப்பாகாது. 463.தன் பெஞ்சாதியைத் தான் அடிக்க தலையாரியின் அனுமதியா? 464.தன் வினை தன்னைச் சுடும். 465.தம்பியுள்ளான் படைக்கஞ்சான். 466.தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணைத்தை மிஞ்சிய வறுமையும் இல்லை. 467.தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன. 468.தள்ளி இருக்க உறவு, கிட்ட வந்தால் முட்டப் பகை. 469.தாயிற் சிறந்த கோவிலுமில்லை. 470.தாயில்லாப் பிள்ளை தறுதலை. [...]
Posted: February 7th, 2009 under தமிழமுது, பழமொழிகள் 615.
Comments: none





