ஞானம் எட்டி-10
ஞானம் எட்டி-10 ****************** 10.யோகாதி யோகநிலைத் திருந்த போக்கு ………….. முற்பனமாங் கற்பமுண்டு சாகாப் போக்கும் வேகாத் தலையுமதி ரவியின் போக்கும் ………… வெண்சாரை கருநெல்லி விதித்த போக்கும் போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூநீர்ப் போக்கும் …………. பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும் ஆகாத மனிதர்களை யகற்றும் போக்கு ………. மசடில்லா மாதுரசக் குளிகை காப்பாம். யோகமும், மகாயோகமும் நிலைத்திருந்த விதத்தையும், கற்பம் உண்ணவேண்டிய முறை பிறழாது உண்டு சாகாமல் செத்து வாழும் விதத்தையும், வேகாத்தலையையும், சந்திர சூரிய [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none
ஞானம் எட்டி-9
ஞானம் எட்டி-9 ***************** 9.தசநாடி சுவாசமதுஞ் செனித்த வாறுஞ் ………செகதலத்தி லெனைப்பழித்த செய்தி வாறும் அசைவதிருந் தாக்கை யசையாதவாறு ………மடிநடுவு முடிவான கற்ப வாறும் பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும் ……..பஞ்சபட்சி யஞ்சுநிலைத் திருந்த வாறும் இசையும்தச தீட்சைமதி ரவியின் வாறு ……..மிராசயோ கத்தினருள் காப்புத் தானே. தசநாடிகளும், தச வாயுவும் உண்டான விதத்தையும், இவ்வுலகின்கண் என்னைப்பழித்த விதத்தினையும், இத்தேகத்தை அழியாமலிருத்தி வைக்கவல்ல வழியையும், ஆதிநடு அந்தமாயுள்ள கற்பங்கள் சாதிக்கும் விதியையும், பூமிநாதத்தை எடுக்கும் விதத்தையும், இவ்வுடலில் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none
ஞானம் எட்டி-8
ஞானம் எட்டி-8 ***************** 8.ஐந்துருவா யுடலெடுத்த வாறின் கூறு …………மசடில்லாத் தேகமெண்சா ணாத்துமக் கூறும் விந்துதித்துச் சடமெடுத்த நாதக் கூறும் ………..விற்பனமாய்க் கடமுதித்த காயக் கூறும் தந்திரமாய் நீர்க்குமிழி யான கூறுந் ………..தத்துவந்தொண் ணூற்றாறு சைலக் கூறும் இந்திரியசுக் கிலசுரோணி தத்தின் கூறு ……….மியம்புதற்குத் தசநாடி யியல்பு காப்பாம். பஞ்ச பூதங்களால் இவ்வுடல் எடுத்த விதத்தையும், இவ்வுடலில் வந்திருக்கும் ஆன்மாவின் கூறும், விந்துநாதங்களால் எவ்வாறு தேகம் வந்தது என்பதையும், அப்படி வந்த உடற்கட்டுகளின் விதத்தையும், அது நீர்க்குமிழிபோல் [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 3





