ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

தாகி பிரபம்-3

இந்நூல் கூறும் கருத்துக்கள்: இந்நூலில் செயலற்ற சொல் எதுவும் இல்லை. ஒவ்வொரு சொல்லையும் விரிக்கின் ஒவ்வொரு பக்கம் எழுதலாம். இடம், காலம் கருதி முக்கியமான சூக்குமக் கருத்தை மட்டும் விளக்கியுள்ளோம். இறைவா, நீ, சூக்குமமாய் மறைந்து இருந்தபோது நான் உன்னுடன் கலந்திருந்தேன். அப்போது, என்னை யான் கண்டேன். உன்னில் என்னைக் கண்டேன். என்னில் உன்னைக் கண்டேன். உன்னில் யான் பனிக்கட்டி கரைந்து நீரில் கலப்பதுபோல் இடைவெளி யின்றிக் கலந்திருந்தேன். அப்போது நானோ ஏகாந்த நிலையிலிருந்தேன். ஏகாந்தம்: நானேயல்லாது [...]

தாகி பிரபம்-2

இறை கேட்டது: உமக்கு நாசியிருந்ததா? யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் நாசியாயிருந்தது. இறை கேட்டது: உமக்கு வாயிருந்ததா? யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் வாயாயிருந்தது. இறை கேட்டது: உமக்கு ஆக்கையிருந்ததா? யான் விடுத்தது : இறைவா, ஆம். பரிபூரணமும் எனதாக்கையாயிருந்தது. இறை கேட்டது: இப்படியே பரிபூரணமாயிருந்தபோது, உமக்கு ஆரம்பமும் முடிவுமிருந்தனவா? யான் விடுத்தது : இறைவா, ஆம். ஆரம்பமும் முடிவுமிருந்தன. இறை கேட்டது: அது என்ன? யான் விடுத்தது : இறைவா, [...]

தாகி பிரபம்-1

தாகி பிரபம் ************* ஆக்கியோர்: பெருமதிப்பிற்குரிய அஷ்ஷைகு ஜமாலிய்யா சையிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹசனிய்யுல் ஹாஷிமிய் – இலங்கை இவ்வறிய கருவூலத்தைப் பற்றி அளிமிகு தம்பி. திரு.இம்தியாஸ் எனக்குத் தனிமின்னஞ்சலில் முன்னர் எழுதியுள்ளார். அவர் எனக்கு அனுப்பியிருப்பதாகச்சொல்லப்படும் நூல் என் கைக்குக் கிடைப்பதற்கு முன்னரே அந்நூல், எனக்குஅறிவூட்ட, என்னைத் தேடி வந்தது இறையாணையோ? என் கொடுப்பினையோ? அறியேன். இவ்வரிய நூலைப்பற்றித் தம்பி. இம்தியாஸ், என் கருத்துக்களையும் கேட்டிருந்தார். ஆனால், படிக்கும்பொழுது, ஒவ்வொரு சொல்லும் சொல்லும்கருத்துக்களும், மனுவுக்கும் [...]