ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

சிவவாக்கியர் – 90

90. தில்லையே வணங்கிநின்று தெண்டனிட்ட வாயுவை எல்லையைக் கடந்துநின்று ஏகபோக மாய்கையோ டெல்லையைக் கடந்துநின்று சொர்க்கலோக வெளியிலே வெள்ளையுஞ் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே. வடக்கு எல்லை – இடகலை தெற்கு எல்லை – பிங்கலை நடு எல்லை – தில்லை – சுழுமுனை உயிர் மூச்சானது தில்லையாகிய சுழிமுனையில் வணங்கி ஒடுங்கி நின்று விம்மிப் பூரித்து, மாயையின் எல்லையைக் கடந்து பிய்த்துக்கொண்டு வெளிவரும்போது சொர்க்கலோக வெளியாம் ஆகாயம் காணும்( ஆகாயம் கபாலக் குக்கைக்குள்ளேதான் உள்ளது!!!). ஆங்கே சிவப்பும்(சக்தி) [...]

ஞானம் எட்டி-28

28. மூல முதலறிந்து சிவசிவ ……முத்திதருஞ் சுழிமுனை யறிந்து பாலமுந் தாண்டியப்பால் பரிபூரண ……பானுமதி யமிர்த பானமுண்டு சீலமு நிறைந்துநின்ற மூலமணி …..திருமாலின் பொற்கமலச் செயலறிந்து ஞானமுங் கடந்துநின்ற வுயர்குல …..ஞானவெட்டி யானான் காணும். மூலாதாரத்தையும் அதன் மூலத்தையும் அறிந்து (எண்ணப்) பிறப்பு அறுக்கும் முத்தியைக் கொடுக்கும் சுழிமுனையறிந்து உணர்ந்து, பாலத்தைத் தாண்டி, அப்பால் எங்கும் நிறைந்திருக்கும் சூரியசந்திர அமிர்தத்தை உண்டு, நல்ல சூக்கும அறிவு மிகு மூலமணியாம் திருமாலின் திருவடிச் செயல் என்ன என உணர்ந்து, [...]