பிரபுலிங்க லீலை-1.18
1.18.பரமசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கத் தன்னின் வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைப்பொ ருந்தும் அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன். திரிவு – மாறுபாடு, உரைமனம் இறந்துநின்ற – வாக்கையும் மனத்தையுங் கடந்துநின்ற. சிவலிங்கத்தினின்றும் சதாசிவன் தோன்றுவன். ஞானசக்தி அவனைப் பொருந்துதலால் சிவன் தோன்றுவன்.
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none





