ஞானக் குறள்-(191-200)
2.திருவருட்பால் ************************** 20.சதாசிவம் (191-200) ******************************** 191. பத்துத் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். எட்டுத் திக்குகளும், மேல், கீழ் ஆகியவைகளும் சேர்ந்து பத்துத் திக்குகளாயின. உலகமெலாம் உள்ள தூல சூக்குமங்களில் சிவம் வியாபித்து கலந்து நிலைத்திருக்கும். 192. விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல் உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். ஆகாயத்தில் பூரணமாக நிலையாக நின்று விளங்கும் சுடரொளியாகிய ஆதவன் (ஆ+தவன்) போல் உடலினுள்ளே சிவஒளி வியாபித்துள்ளது. [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4





