ஞானரத்தினக் குறவஞ்சி (31-35)
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா. எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி? அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா! 32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா! எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி? அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா) 33.ஆங்கார வுடலுக்கு [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானரத்தினக் குறவஞ்சி (21-30)
21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!” ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி? ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!” 22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!” ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி? மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா. [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானரத்தினக் குறவஞ்சி (11-20)
11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!” முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி? மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும் கண்களடா சிங்கா. 12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!” உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி? பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா(தலமடா) சிங்கா. 13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது இந்த [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: 5

