ஞானரத்தினக் குறவஞ்சி (31-35)
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?
அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?
அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானரத்தினக் குறவஞ்சி (21-30)
21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!”
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர், மண் ஆகியவைதானடா சிங்கா!”
22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!”
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா சிங்கா.
23.”தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: none
ஞானரத்தினக் குறவஞ்சி (11-20)
11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!”
முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?
மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும் கண்களடா சிங்கா.
12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!”
உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?
பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா(தலமடா) சிங்கா.
13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!”
இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?
இந்த உடலுக்கு [...]
Posted: April 9th, 2008 under சித்தர் இலக்கியம், ஞானரெத்தினக் குறவஞ்சி.
Comments: 5
