<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com &#187; குரு</title>
	<atom:link href="http://siththan.com/archives/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>குரு வாக்கு</title>
		<link>http://siththan.com/archives/87</link>
		<comments>http://siththan.com/archives/87#comments</comments>
		<pubDate>Sat, 05 Apr 2008 14:56:51 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA[குரு]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=87</guid>
		<description><![CDATA[ஏ! சீடர்களே! உலகிலுள்ள அனைவரையும் உயிர் என்னும் கயிற்றால் கட்டி பொம்மலாட்டம் நடத்துவது அன்னை பராசக்தியே. உன் தலைவியின் கட்டளையை நன்குணர்ந்து நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தையும் செலுத்து. உன் கதாபாத்திரத்தை நன்கு செய். குழந்தைகள் விளையாடும்போது தாயை மறப்பது இயல்பு. விளையாட்டு முடிந்தவுடன், குழந்தை ஓடிப்போய் அன்னையின் மடியில் தஞ்சமடைவதைப்போல் நாடகம் முடிந்ததும் அன்னையிடம் தஞ்சமாகிவிடு. நாடகத்தில் அரசன் வேடமிடும்போது மகிழாதே. அப்படி மகிழ்ந்தால் பிச்சைக் காரனாக வேடமிடும்போது துக்கம் தானே வரும். உன்னையுணர்ந்து, நான் இவன்; [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext"><span style="font-weight: bold; color: #cc0000"></span><span style="font-weight: bold; color: #cc0000"></span>ஏ! சீடர்களே!</p>
<p>உலகிலுள்ள அனைவரையும் உயிர் என்னும் கயிற்றால் கட்டி பொம்மலாட்டம் நடத்துவது அன்னை பராசக்தியே. உன் தலைவியின் கட்டளையை நன்குணர்ந்து நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தையும் செலுத்து. உன் கதாபாத்திரத்தை நன்கு செய். குழந்தைகள் விளையாடும்போது தாயை மறப்பது இயல்பு. விளையாட்டு முடிந்தவுடன், குழந்தை ஓடிப்போய் அன்னையின் மடியில் தஞ்சமடைவதைப்போல் நாடகம் முடிந்ததும் அன்னையிடம் தஞ்சமாகிவிடு. நாடகத்தில் அரசன் வேடமிடும்போது மகிழாதே. அப்படி மகிழ்ந்தால் பிச்சைக் காரனாக வேடமிடும்போது துக்கம் தானே வரும். உன்னையுணர்ந்து, நான் இவன்; இக்கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்; நாடகம் முடிந்ததும் நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்; எனும் எண்ணமிருப்பின் மகிழ்வும், துக்கமும் வராது. நீ அன்னையின் கைபொம்மை என நம்பி உனக்குக் கொடுத்த பணிகளைப் பற்றற்றுச் செய்துவா.</p>
<p>சீவனில் சிவன் கலந்துதான் இருக்கிறான். சீவன் உடலில் ஓடுகிறது. அதில் கலந்துள்ள சிவனை எளிதில் கண்டுணர்வதில் ஏன் தாமதம். மாயை மறைக்கிறது. அதை ஒதுக்கிவிட்டால் சிவம் வெளிப்படும்.</p>
<p>பொய்ப்பொருட்களாகிய மண், பொன் மற்றுமுள்ள நிலையற்ற பொருட்களில் உன் மனதைச் செலுத்தியும், அற்ப விடயங்களைப் பற்றியே நினைத்தும், அவைகளே நிலையானவைகளென நம்பியும் உன் உடையிலும், உணவிலும், உடலிலும் உள்ளத்தைச் செலுத்தி வாழ்கிறாயே. இவ்வாறு கோடானகோடி முட்டாள்கள் செய்து அலுத்துச் செத்ததை அறியாயோ? பொய்யான உலகில் மடையர்கள் மெச்சும் காரியங்களைச் செய்துவிட்டுப் பெருமையடித்துக் கொள்கிறாயே? நிலையற்றவைகளிடம் இருக்கும் ஆசைகளைத் துறந்து விட்டால் உன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்துணரலாம்.</p>
<p>உலகில் கடவுள் இருக்கிறாரா? ஒரு கடவுளா? பல கடவுள்களா? என வீண் விவாதம் செய்து உன்னை நீயே கெடுத்துக்கொள்ளாதே. வீண்விவாதம் செய்யும் நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டால் உடல் கட்டைமட்டும் கிடக்கும். வீண் விவாதங்களை விட்டுவிடு. சத்தியத்தை நம்பு. இறைவன் சத்தியமானவர். அன்பும், சத்தியமும் மட்டுமே கடவுளின் உருவங்கள். இருக்கா? இல்லையா? எனும் சந்தேகம் வந்தால் நரகம்தான் நீ போகுமிடம். இறைவனை சத்தியமாக நம்பினால் நீயும் இறைவனைச் சார்வாய்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/87/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>குருவை நம்பு</title>
		<link>http://siththan.com/archives/67</link>
		<comments>http://siththan.com/archives/67#comments</comments>
		<pubDate>Fri, 04 Apr 2008 12:19:25 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA[குரு]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=67</guid>
		<description><![CDATA[நீ மெய்ப்பொருளை அடைய வேண்டுமாயின் உன் ஞான ஆசிரியனை (குரு) கடவுளாக எண்ணி முழுமையாகவும், சத்தியமாகவும் நம்பு. குரு பயிற்றுவித்த மந்திரத்தைக் கடவுள் கொடுத்ததாக நம்பு. பயிற்றுவித்த மந்திரத்தை இடைவிடாது உதடு பிரியாதபடி ஓதுவாயாக. அப்போதுதான் நீ, யோகிகளில் சிறந்த யோகியாகவும், ஞானிகளில் சிறந்த ஞான சூரியனாகவும் விளங்குவாய். குருவாக்கை நம்பியவர்களுக்கு, இவ்வுலகில் அடையமுடியாதது, சாதிக்க முடியாதது என்பது எதுமில்லை. குருவாகிய கடவுளை நம்பினால் நீயும் அவனாகிறாய். கடவுளை அறிந்தவன் கடவுள் ஆவான். குரு வேறு; தெய்வம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext">நீ மெய்ப்பொருளை அடைய வேண்டுமாயின் உன் ஞான ஆசிரியனை (குரு) கடவுளாக எண்ணி முழுமையாகவும், சத்தியமாகவும் நம்பு. குரு பயிற்றுவித்த மந்திரத்தைக் கடவுள் கொடுத்ததாக நம்பு. பயிற்றுவித்த மந்திரத்தை இடைவிடாது உதடு பிரியாதபடி ஓதுவாயாக.</p>
<p>அப்போதுதான் நீ, யோகிகளில் சிறந்த யோகியாகவும், ஞானிகளில் சிறந்த ஞான சூரியனாகவும் விளங்குவாய். குருவாக்கை<br />
நம்பியவர்களுக்கு, இவ்வுலகில் அடையமுடியாதது, சாதிக்க முடியாதது என்பது எதுமில்லை. குருவாகிய கடவுளை நம்பினால் நீயும் அவனாகிறாய். கடவுளை அறிந்தவன் கடவுள் ஆவான்.</p>
<p>குரு வேறு; தெய்வம் வேறு எனும் எண்ணம் உன்னுள் எழக்கூடாது. பயிற்றுவித்த மந்திரம் வேதங்களின் சாரம். அது உன்னை மெய்ப்பொருளோடு இறண்டறக் கலக்கும்படி செய்துவிடும்.</p>
<p>குரு, மந்திரம், கடவுள் ஆகிய மூன்றும் ஒன்றேதான். மூன்றும் முடிவான ஒரே பொருளாகிய பிரமம். ஆகவே, குருவிடம் சிரத்தையுடன் கூடிய பக்தி இருக்குமாயின், இனி பிறவிப் பிணி உனக்கில்லை. நீ நித்தியத்திற்காகவே படைக்கப் பட்டவன் அந்நிலையை அடைவாய். குருவை நம்பிவிடு.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/67/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>நல்ல குரு யார்?</title>
		<link>http://siththan.com/archives/50</link>
		<comments>http://siththan.com/archives/50#comments</comments>
		<pubDate>Fri, 04 Apr 2008 11:39:41 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[ஞான முத்துக்கள்]]></category>
		<category><![CDATA[ஞானம்]]></category>
		<category><![CDATA[குரு]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=50</guid>
		<description><![CDATA[ஒரு நல்ல குரு தேவை. அவன் குணமென்ன? மதாச்சாரியன்: தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப் பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன். காரியக் குரு: ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர். ஞானகுரு: மந்திர தந்திர [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p class="contenttext">ஒரு நல்ல குரு தேவை. அவன் குணமென்ன?</p>
<p>மதாச்சாரியன்:</p>
<p>தனக்குப் பொருள் வரக்கூடிய வழிமுறைகளைப் பயிற்றுவித்து, அதைப்<br />
பின்பற்றினால் சுவர்க்கம் கிட்டும், அது கிட்டும், இது கிட்டும் என<br />
ஆசைகாட்டி அதன் மூலம் பொருள் தேடுவோன்.</p>
<p>காரியக் குரு:</p>
<p>ஆரம்பத்தில் பற்றற்றவர் போலப்பேசி, பின்னர் “நீ நல்ல சீடனாயிருக்கிறாய். ஆகவே, உனக்கு மட்டும் இந்த மந்திரங்களை உபதேசிக்கிறேன். இதனால் எல்லாம் சித்தியாகும். ஆனால் தட்சணை கொடுக்கவிடில் சித்திக்காது” எனக் கூறிப் பணம் பிடுங்குவர்.</p>
<p>ஞானகுரு:</p>
<p>மந்திர தந்திர கலைகளை விலக்கி ஞானமார்க்க வழிகளை ஆய்ந்து, அனுபவித்து உணர்ந்து பக்குவமுள்ள சீடனுக்குப் பிரதி பலன் கருதாது உரைத்து வழிநடத்தும் குரு. பொருள் பிடுங்காதவனே நல்ல குரு.</p>
<p>இப்பொழுதெல்லாம், நல்ல ஞானாசிரியன் கிட்டுவதரிதே. ஆகவேதான் பெரும்பாலும் போலி குருக்களைச் சென்றடைவது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/50/feed</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>

