ஞானம் எட்டி-35
35.பூணநூல் பிறந்ததெங்கே சிவசிவ பின்குடுமியான துவுமான தெங்கே வானோர்கள் துதிப்பதெங்கே மணிமந்திர வாக்கிய செபதபங்கள் வாழ்க்கையெங்கே கோனருள் புரிவதெங்கே யாகசாலைக் குருக்களாச் சாரியென்றுங் கூறுவதெங்கே வீணிலே யோதுகின்ற வேதியர்களே வேதம் பிறந்திடமுஞ் சொல்வீர்காண். பூண நூல்(பூணூல்) பிறந்ததும், பின்குடுமி உண்டானதும் எங்கே? வானோர்கள் துதிப்பதும், மணி, மந்திரம், வாக்கியம், செபம், தவம், இவைகளையெல்லாம் செய்து வாழும் வாழ்க்கை எங்கே? இறைவனருள் செய்வது எங்கே? யாகசாலைக் குருக்கள், ஆசாரியர்கள் என்று சொல்லிகொண்டு திரிவது எங்கே? வீணாக முனுத்தங்கள்(மந்திரங்கள்) ஓதுகின்ற [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 2





