பிரபுலிங்க லீலை-1.12
12. அடலுறும் அல்லமன் அரிய சீரொடு படுதலி னயந்துபா ராட்டும் பன்முறை மடனிகும் உலகமென் மொழியை வந்துவர்க் கடலிலு மூழ்குவர் காலம் ஒன்றினே. அரிய அழகோடு(சீரோடு) எல்லவன்மையும்(அடலுறும்) பொருந்திய அல்லமன் தோன்றுதலை விளக்கும் என்மொழியை (படுதல்) நயந்து பலமுறை போற்றுவார்(பாராட்டுவார்) அறியாமையினின்றும் நீங்கிய(மடன் இகும்), கிரகணத்தில் உவர்க்கடலில் மூழ்கித் தவம் செய்யும் ஆன்றோர். காலம் ஒன்றினும் (சூரிய சந்திரன் பொருந்தியுள்ளபோது) = கிரகணம்
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: 1





