ஞானக் குறள்-(291-300)
3.தன்பால் *************** 30. துரிய தரிசனம் (291-300) ************************************** 291. வன்னிய தெட்டு மதியம் பதினாறு முன்னிய பன்னிரண்டு முள். முதன்மையான சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அங்கிக்கு எட்டு கலைகளும், சந்திரனுக்குப் பதினாறு கலைகளுமுள்ளன. 292. சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம் பாருமி னீது பயன். சூரியனோடு அக்கினி கலந்தபின் சந்திரன் உதிப்பான். அந்த ஆநந்தத்தை நீங்களே உணர்ந்து அறிக. திருமந்திரம்: “குரவ னுயிர்முச் சொரூபமுங் கைக்கொண் [...]
Posted: April 7th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 4





