புரியட்ட காயம்
புரியட்ட காயம்
********************
ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் ஆகியவை 5 தன்மாத்திரைகள்.
இவற்றுடன் இறுப்பு, எழுச்சி, மனம் ஆகிய மூன்றும் சேர எட்டாகும்.
இதுவே புரியட்டகாயம்.
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: none
காயமே இது பொய்யடா
ஐயா,
காயமே இது பொய்யடா…..
என்ற செய்யுளைச் சொல்லி அதன் பொருளைச் சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்…
பிரியமுடன்,
சிவா..
அன்பு சிவா,
“காயமே இது பொய்யடா
வெறும் காற்றடித்த பையடா
மாயனாராம் மண்ணு குயவன்
செய்த மண்ணு பாண்டம் ஓடடா”
யாக்கை(உடல்) நிலையாமையைக் குறிக்கும் பாட்டு. மாயனாகிய ஈசன் மண்ணைப் பிசைந்து செய்த மட்பாண்டமாகிய இக் காயம் (உடல்), சீவனாகிய காற்றைத் தாங்கும் பை. ஆனால் உடல் அழியும். சீவன் அழியாது.எப்படிஎனில் மண்ணால் செய்த கலன் உடைந்தால் ஓடு மட்டும் மிஞ்சுமாப்போல.
இதையே பாம்பாட்டிச் சித்தர்:
“ஊத்தைக் குழிதனிலே மண்ணைஎடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த [...]
Posted: April 4th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: none
