ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

கவலைகளை மறந்துவிடு

உன்னை அறிந்து நீ உய்யவேண்டிச் செய்யும் சாதனைகளாலும், பயிற்சிகளாலும் உன் உடலே போனாலும் போகட்டும். “காயமே இது பொய்யடா”. தன்னை அறியாது உடலை மட்டும் அறுசுவை உண்டிகளைத் தின்று, உலகாயத சுகங்களை அநுபவித்து வளர்த்தல் ஏன்? அப்படி வளர்ந்த உடல் பூமிக்குப் பாரம்தானே? தன்னை அறியும் ஞானப்பாட்டைக்கு வந்தபின் இவ்வுடலைப் பற்றியும், உலகில் உள்ள சுற்றத்தாரையும் பற்றி உனக்குக் கவலை ஏன்? மாயா உலகைக் கனவென முழுவதும் நம்பி உறுதியாய் நினைத்து விடு. கனவை மெய் என [...]

கவலைப் படாதே

அலைபாய்வது மனத்தின் இயல்பு. இறைவனின் நாமம் புலன்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தது. சிலவற்றைச் செய்ய எண்ணி செய்யாமல் விட்டதற்காகக் கவலைப்படாதே. இறைவனைத் தவிற மற்றவற்றில் மனம் செல்லும்பொழுது, அவற்றின் நிலையாமையை நினவுக்குக் கொண்டுவா. இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடை.