ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags


Tamil 10 top sites [www.tamil10 .com ]


Tamil Top Blogs

free counters

கந்தர் கலிவெண்பா – 20

ஒத்த புவனத் துருவே யுரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவாய் – வைத்த கலையே யவயவமாக் காட்டுமத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி அண்டமுருவாகி அங்கஞ் சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் ஆவிப்புலனுக் கறிவளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ சத்த – ஏழு தாது – இரத்தம், ஊன், மச்சை, மேதை, எலும்பு ஆகியன கலை – நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை ஆகியன காட்டும் – [...]

ஞானக் குறள்-(131-140)

2.திருவருட்பால் *********************** 14.கலை ஞானம் (131-140) ***************************************   131. சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது.   “இரவி சங்கரன் – ஈசுவரி திங்கள். ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின் கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு மூலமாம்.   வாசிட்டக்காரர் கூறுவது:   “விராவிவரும் புறநின்று மபான னென்னும் வியன்மதிய மேனியெல்லாங் – குளிரவிக்கும் பிராணனெனுஞ் சூரியன்றான் கனலாயுள்ளே பேசியவிவ் வுடற்பாகம் – பிறக்குப் [...]

கலைகளும் கரு உற்பத்தியும்

இந்த சூரியக்கலை சந்திரக்கலை அறிந்து கூடும் கால், பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என பாலறிய முடியும் என்கிறார்களே அது உண்மையா? உண்மையாயின் அது எவ்வண்ணம்? அதை நாமறிந்து ஆவதென்ன? கூடும்போது நினைவு எந்தக் கலையில் சரம் ஓடுகிறது?என்று சிந்திக்குமா? நம்மால் எதையும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் அது பொய்யா? மெய்யா? என அறிதல் அவசியமல்ல என்பது என் கருத்து. இதையெல்லாம் அறிந்துகொள்ள SCANNER வந்து விட்டது. “குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் [...]