சிந்தனைக்கு – 11
சிந்தனைக்கு – 11
******************
11. சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம் இதுவரை யாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின் மூலமும் இறைவனை உணரமுடியாது.
- விவேகாநந்தர்
Posted: February 18th, 2009 under சிந்தனைக்கு, விவேகாநந்தர்.
Comments: none
கடவுளிடம் பொருள் கேட்காதே!
கடவுளிடம் பொருள் கேட்காதே!
***************************************
பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்த ஒருவனுக்கு பிரம்மா தரிசனம் தந்து, “உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்” என்றார். உடனே, தின்னிப் பண்டாரமான அவன், “கடவுளே! எனக்கு ஆயுள் பூராவும் அமர்ந்து சுவையுடன் திருப்தியாக உண்ணும அளவுக்குப் பொருள் கொடு!” என்றான்.
பிரம்மாவோ, அவ்வளவுதானே! அதோ அந்த நரியிடம் சென்று பேசிவிட்டு வா. நீ கேட்டதைத் தருகிறேன்” என்றார். அவனும் நரியிடம் சென்று, “நரியாரே! நான் பிரம்மாவிடம் பொருள் கேட்டேன். அவர் உன்னைப் பார்க்கச் சொன்னார்” என்றான். [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 15
விளக்கம் தேவை!
***********************
ஒரு சாதாரண மனிதன் கூட யாரவது தவறு செய்தால் காலப் போக்கில் மன்னித்து விடுவான். ஆனால், நாட்டில் நடக்கும் அநியாங்களை கொடுமைகளையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் கடவுளை வணக்கவேண்டுமா?
தங்களின் முதல் வினாவுக்கு அடிப்படை:-
இறைவன் இருக்கிறானா? இல்லையா?
இறைவன் ஒருவனே. அவன் இருக்கின்றான். சந்தேகமே இல்லை.
ஞானிக்கு சந்தேகத்தில் (சந்+தேகத்தில் = ஒளிபொருந்திய உடலில்) இருக்கிறான்.
பக்திவழி செல்வோனுக்கு ஆலயத்தில் உள்ள கல்லில் இருக்கின்றான்.
சித்தர்களுக்குச் சித்தமாக இருக்கின்றான்.
குழந்தைக்குத் தாயாக உள்ளான்.
நல்லவைகள் நடக்கும்போது “இது என் வலிமையால்”என மார்தட்டி மகிழ்பவன், துன்பம் வரும்போது “இருந்தாலும் இந்த [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 10
