86.இறைவனா லெடுத்தமாட
86.இறைவனா லெடுத்தமாடத் தில்லையம் பலத்திலே அறிவினா வடுத்தகாய மஞ்சினா லமர்ந்ததே கருவிநாத முண்டுபோய் கழன்றவாச லொன்பதும் ஒருவரா யொருவர்கோடி யுள்ளுளே யமர்ந்ததே. கருவி = பொறியும், அந்தக்கரணங்களும் கருவி கழலுதல் = பலம் கெடுதல் நாதம் = விந்து தில்லையம்பலத்திலே உறையும்(எழுந்தருளியிருக்கும்) இறைவனால் ஐந்து பூதங்களாகிய நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகியவற்றால் மாடமாகிய உடல் உருவாக்கப்பட்டது. அதில் நாதமாகிய விந்து பெலம் குன்ற(குறைய), பொறிகளும் அந்தக்கரணங்களும் பெலம் குன்றி சீரழிந்துவிடும். அப்படி விந்து நாதம் பெலம் குன்றாது, ஒன்பது வாயில்களான, [...]
Posted: July 27th, 2008 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none





