கந்தர் கலிவெண்பா – 19
இந்நூல் குமர குருபர சுவாமிகளால் அருளப்பட்டது. அவர் பிறவியால் ஊமை. ஐந்தாம் அகவையில் திருச்செந்தூரில் ஊமைத்தன்மை நீங்கப்பட்டது. அப்பொழுது அங்கு அமர்ந்த முருகனைப் போற்றிப் பாடியது. இதனுள் சைவ சித்தாந்தக் கருத்து, கந்த புராணக் கதைச் சுருக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. இது புகழ் மாலை வடிவாக அமைந்துள்ளது. ************************************************************************ இளம்பருதி நூறா யிரங்கோடி போல வளந்தருதெய் வீக வடிவும் – உளந்தனிற்கண்(டு) ஆதரிப்போர்க் காருயிரா யன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியவைந்து ஓங்காரத் துள்ளொளிக்கும் [...]
Posted: December 27th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: none





