பிரபுலிங்க லீலை-1.19
உருத்திரன், திருமால், ஆகியவர்களின் தோற்றம் ******************************************************* 1.19 சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியன் விருவ ரானும் தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும் போற்றுறும் அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால்.சாற்றும் – சொல்லும், போற்றுறும் – போற்றுதலைப் பெறுகின்ற, அரி – திருமால், பொறி – திருமகள். சிவனுக்கு இச்சாசத்தி சத்தியாவாள், இவ்விருவராலும் உருத்திரன் தோன்றுவன். உருத்திரனுக்குக் கிரியாசத்தி சத்தியாவாள். இவர்களிருவராலும் திருமால் தோன்றுவன். திருமாலுக்குத் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: 3





