சிவவாக்கியர் – 91
91. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர் உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே. உடலுக்கு உயிர் வந்ததா? அல்லது உயிருக்கு உடல் வந்ததா? அப்படி உடலுக்குள் உயிர் நுழைந்தது என்றால் அந்த உயிருக்கு உருவம் எது எனக் கூறுவீர். உடல் இறந்த பின்னரும் உயிர் இறப்பது இல்லை. ஆகையால் அந்த ஆன்மாவாகிய உயிர் ஆவியின் ஓட்டத்தில் சலனமற்ற கவனத்தை வைத்து ஒருமுகப்படுத்தி ஞானத்தை ஓதுவீர்களே! திருமந்திரம் ************* [...]
Posted: January 4th, 2009 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none





