சிவவாக்கியர் – 91
91. உடம்புயி ரெடுத்ததோ வுயிருடம் பெடுத்ததோ உடம்புயி ரெடுத்தபோ துருவமேது செப்புவீர் உடம்புயி ரிறந்தபோ துயிரிறப்ப தில்லையே உடம்புமெய் மறந்துகண் டுணர்ந்துஞான மோதுமே. உடலுக்கு உயிர் வந்ததா? அல்லது உயிருக்கு உடல் வந்ததா? அப்படி உடலுக்குள் உயிர் நுழைந்தது என்றால் அந்த உயிருக்கு உருவம் எது எனக் கூறுவீர். உடல் இறந்த பின்னரும் உயிர் இறப்பது இல்லை. ஆகையால் அந்த ஆன்மாவாகிய உயிர் ஆவியின் ஓட்டத்தில் சலனமற்ற கவனத்தை வைத்து ஒருமுகப்படுத்தி ஞானத்தை ஓதுவீர்களே! திருமந்திரம் ************* [...]
Posted: January 4th, 2009 under சித்தர் இலக்கியம், சிவவாக்கியர் பாடல்கள்.
Comments: none
ஞானம் எட்டி-47
47.கருவதுந்தரித்ததெங்கே சிவசிவ காயமா ………….யுதித்தவந்தக் கருத்துமெங்கே அருவுருவான தெங்கே அண்டபிண்டங்களாதியு …………மந்தமுங்கூடியமைந்ததெங்கே உருவடி நடுவுமெங்கே ஒங்காரமெனும் உடலுயி …………..ரெடுத்த விதவுகமையெங்கே மருவியநால்வேதஞ் சொலும்மதி கெட்ட மாந்தர்களிதை …………..யறிந்து வகுத்துரைப்பீர். பொருந்திய நான்கு வேதங்களையும் மனப்பாடம் செய்து ஓதும் அறிவுகெட்ட மனிதர்களே! கீழ்வரும் வினாக்களுக்கு உங்களால் விடை அளிக்க இயலுமா? நீங்கள் கருவாய் எங்கு தரித்தீர்கள்? எந்த விதத்தில் தரித்தீர்கள்? அந்தக்கருவானது தாயின் தேகத்தில் வந்தவிதம் எப்படி? உருவற்ற அது உருவமானது எப்படி? அண்டபிண்டங்களெல்லாம், முதல், நடுகடை என்று [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: 1





