ஞானக் குறள்-(11-20)
1. வீட்டுனெறிப்பால் ********************** 2. உடம்பின் பயன் (11-20) *************************** 11. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண். இந்த மானிட உடலைப் பெற்றது, இதற்குள் இறைவனைக் காண்பதற்கேயாம். 12. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனே யுணர்க உணர்வு டையார். அறிவுடையவர்கள் அறிவைப் பயன்படுத்தி இறைவனை (இவ்வுடலில்) உணர்வதே இவ்வுடல் எடுத்ததின் பயன் என்ற் அறிவர். திருமந்திரம்: “உணர்வு மவனே யுயிரு மவனே புணர்வு மவனே புலவி யவனே யிணரு மவன்றன்னை யெண்ணலு மாகான் [...]
Posted: April 6th, 2008 under ஞானக் குறள், ஞானம்.
Comments: 21





