ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

பிரபுலிங்க லீலை-1.16

பிரபுலிங்க லீலை
********************
16. மயலளற் றூன்றுகோல் மல்கும் அன்பெனும்
இயலெழுத் தெழுதுகோ லங்க லிங்கமாம்
வியனிலத் தளவுகோல் மதிவி ளக்கினை
அயர்வறத் தூண்டுகோல் அமல லீலையே.
மயக்கமாகிய சேற்றுக்கு (மயலளற்று) ஊன்றுகோல் நிரம்பிய (மல்கும்) அன்பு; இலக்கணமுடைய எழுத்துக்கு (இயலெழுத்து) எழுதுகோல் அங்கணனாம் (அங்கமாம்) சிவபெருமானின் லிங்கமாம்; விரிவான நிலத்திற்கு (வியனிலம்) அளவுகோல் அறிவாகிய விளக்கு (மதிவிளக்கு); சோர்வு நீங்கத் (அயர்வற) தூண்டுகோல் அமல லீலையெனும் நூல்.
இதை, அமலலீலை, ஊன்றுகோல், எழுதுகோல், அளவுகோல், தூண்டுகோல் ஆம் எனக் கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

கந்தர் கலிவெண்பா – 5

5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி – யேகத்
திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்
தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று [...]

ஞானம் எட்டி-37

37.செத்ததோர் மாடெடுப்போம் சிவசிவ
……….. சுடுகா டனுதினங் காத்திருப்போம்
நித்தமுங் கடவுள்தனை ரவிமதியின்
………. நேசமுடனே யுறுதி வாசஞ்செய்வோம்
சுத்தவீர சைவமுடன் வாசிவாவெனும்
……… தோத்திரஞ்செய்தே பொசித்துக் காத்திருப்போம்
கர்த்தனை யந்திசந்தி உச்சமதிலும்
…….. கருத்தினிலே நினைப்போ மாண்டேகேளீர்.
உறுதி – அறிவு
என்னுடைய ஆண்டைமாரே! நான்சொல்லும் எங்கள் விதயங்களை நீங்கள் நன்றாய்க்கேளுங்கள் அவை என்னவென்றால், செத்துப்போன மாட்டையெடுப்போம், சுடுகாடு காப்போம், சூரியசந்திரர்களின் சந்திப்பால் தினம்தினம் அறிவுடன் வாழ்ந்து கடவுளை வணங்குவோம். அன்றிச் சுத்தவீரசைவமார்க்கத்தில் கலந்து [...]