பிரபுலிங்க லீலை-1.16
பிரபுலிங்க லீலை
********************
16. மயலளற் றூன்றுகோல் மல்கும் அன்பெனும்
இயலெழுத் தெழுதுகோ லங்க லிங்கமாம்
வியனிலத் தளவுகோல் மதிவி ளக்கினை
அயர்வறத் தூண்டுகோல் அமல லீலையே.
மயக்கமாகிய சேற்றுக்கு (மயலளற்று) ஊன்றுகோல் நிரம்பிய (மல்கும்) அன்பு; இலக்கணமுடைய எழுத்துக்கு (இயலெழுத்து) எழுதுகோல் அங்கணனாம் (அங்கமாம்) சிவபெருமானின் லிங்கமாம்; விரிவான நிலத்திற்கு (வியனிலம்) அளவுகோல் அறிவாகிய விளக்கு (மதிவிளக்கு); சோர்வு நீங்கத் (அயர்வற) தூண்டுகோல் அமல லீலையெனும் நூல்.
இதை, அமலலீலை, ஊன்றுகோல், எழுதுகோல், அளவுகோல், தூண்டுகோல் ஆம் எனக் கூட்டிப் பொருள் கொள்ளலாம்.
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
கந்தர் கலிவெண்பா – 5
5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி – யேகத்
திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்
தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று [...]
Posted: April 7th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: none
ஞானம் எட்டி-37
37.செத்ததோர் மாடெடுப்போம் சிவசிவ
……….. சுடுகா டனுதினங் காத்திருப்போம்
நித்தமுங் கடவுள்தனை ரவிமதியின்
………. நேசமுடனே யுறுதி வாசஞ்செய்வோம்
சுத்தவீர சைவமுடன் வாசிவாவெனும்
……… தோத்திரஞ்செய்தே பொசித்துக் காத்திருப்போம்
கர்த்தனை யந்திசந்தி உச்சமதிலும்
…….. கருத்தினிலே நினைப்போ மாண்டேகேளீர்.
உறுதி – அறிவு
என்னுடைய ஆண்டைமாரே! நான்சொல்லும் எங்கள் விதயங்களை நீங்கள் நன்றாய்க்கேளுங்கள் அவை என்னவென்றால், செத்துப்போன மாட்டையெடுப்போம், சுடுகாடு காப்போம், சூரியசந்திரர்களின் சந்திப்பால் தினம்தினம் அறிவுடன் வாழ்ந்து கடவுளை வணங்குவோம். அன்றிச் சுத்தவீரசைவமார்க்கத்தில் கலந்து [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none
