பிரபுலிங்க லீலை-1.16
பிரபுலிங்க லீலை ******************** 16. மயலளற் றூன்றுகோல் மல்கும் அன்பெனும் இயலெழுத் தெழுதுகோ லங்க லிங்கமாம் வியனிலத் தளவுகோல் மதிவி ளக்கினை அயர்வறத் தூண்டுகோல் அமல லீலையே. மயக்கமாகிய சேற்றுக்கு (மயலளற்று) ஊன்றுகோல் நிரம்பிய (மல்கும்) அன்பு; இலக்கணமுடைய எழுத்துக்கு (இயலெழுத்து) எழுதுகோல் அங்கணனாம் (அங்கமாம்) சிவபெருமானின் லிங்கமாம்; விரிவான நிலத்திற்கு (வியனிலம்) அளவுகோல் அறிவாகிய விளக்கு (மதிவிளக்கு); சோர்வு நீங்கத் (அயர்வற) தூண்டுகோல் அமல லீலையெனும் நூல். இதை, அமலலீலை, ஊன்றுகோல், எழுதுகோல், அளவுகோல், தூண்டுகோல் [...]
Posted: April 7th, 2008 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
கந்தர் கலிவெண்பா – 5
5. கருவின்றி நின்ற கருவா யருளே உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய போக வதிகாரப் பொருளாகி – யேகத் திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்) ஆகவரும் = போல் அமைந்த இச்சை = விருப்பம் அறிவு = ஞானம் இயற்றல் = செயல் இலயம் = ஒடுக்கம் போகம் = பாதுகாப்புத் தொடக்கம் அதிகாரம் = விரிவு ஏகத்து = ஒன்றாய் தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) [...]
Posted: April 7th, 2008 under கந்தர் கலிவெண்பா, பக்தி.
Comments: none
ஞானம் எட்டி-37
37.செத்ததோர் மாடெடுப்போம் சிவசிவ ……….. சுடுகா டனுதினங் காத்திருப்போம் நித்தமுங் கடவுள்தனை ரவிமதியின் ………. நேசமுடனே யுறுதி வாசஞ்செய்வோம் சுத்தவீர சைவமுடன் வாசிவாவெனும் ……… தோத்திரஞ்செய்தே பொசித்துக் காத்திருப்போம் கர்த்தனை யந்திசந்தி உச்சமதிலும் …….. கருத்தினிலே நினைப்போ மாண்டேகேளீர். உறுதி – அறிவு என்னுடைய ஆண்டைமாரே! நான்சொல்லும் எங்கள் விதயங்களை நீங்கள் நன்றாய்க்கேளுங்கள் அவை என்னவென்றால், செத்துப்போன மாட்டையெடுப்போம், சுடுகாடு காப்போம், சூரியசந்திரர்களின் சந்திப்பால் தினம்தினம் அறிவுடன் வாழ்ந்து கடவுளை வணங்குவோம். அன்றிச் சுத்தவீரசைவமார்க்கத்தில் கலந்து வாசிவா! [...]
Posted: April 6th, 2008 under ஞானம், ஞானம் எட்டி.
Comments: none


