ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கந்தர் கலிவெண்பா – 5

5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி – யேகத்
திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்
தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று [...]

ஞானக் குறள்-(101-110)

2.திருவருட்பால்
************************
11. அருள் பெறுதல் (101-110)
 
101.அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம்.
 
அருளினால் மும்மலங்களாகிய மூன்று முடிச்சுகளை (கிரந்தித்திரயங்களை) ஒழித்து அறிவாகிய பிரணவத்தையும் நிலைப்படுத்திக் கொள்ளலாம். “அருள்’ என்பது சிவம் வெளிப்பட்டு நிற்கையில் அதனிடத்தில் இருந்து வெளிப்படும் கலைகளே.
 
ஞானிகளின் நிலையடயாதோர் மும்மலங்களுடைய குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள். அவை ஆணவம், கன்மம், மாயை ஆம். இம்மூன்றுக்கும் மூலப்பொருள் முறையே உருத்திர முடிச்சு (கிரந்தி), விட்டுணு முடிச்சு (கிரந்தி), பிரம முடிச்சு [...]