யாரோ சொன்னது – 1
யாரோ சொன்னது – 1
******************************
1.”உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.”
Posted: February 18th, 2009 under பொன்மொழிகள், யாரோ சொன்னது.
Comments: none
அன்பும் சிவமும்
அன்பும் சிவமும்
********************
திருமந்திரம்
*************
“அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.”
புறத்தான் = அன்பின் மேலுள்ளவன்.
உடலாயுள்ளான் = அன்பினையே உடலாக உள்ளவன்.
அணுகிய = நெருங்கிய
முன்பினுள்ளான் = உலக உற்பத்திக்கு முன்னும், அதன் அழிவுக்குப் பின்னும்
சிவனாம் சிவம் இன்ப இயல்பை உடையவன். இன்ப இயல்பின் வாயிலாம் அன்பினுள்ளே இருக்கிறான். அந்த அன்புக்குக் காவலாய் புறத்தாகவும் உள்ளான். அன்புக்குப் புகலிடமாய் இருப்பதால் உடலாயும் உள்ளான். “அன்பும் சிவமும் ஒன்றே; அது உடலும் உயிரும் [...]
Posted: April 5th, 2008 under ஞான முத்துக்கள், ஞானம்.
Comments: 7
