<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com &#187; திருப்பாவை</title>
	<atom:link href="http://siththan.com/archives/category/%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-2/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>திருப்பாவை &#8211; 30</title>
		<link>http://siththan.com/archives/1229</link>
		<comments>http://siththan.com/archives/1229#comments</comments>
		<pubDate>Mon, 11 Jan 2010 07:19:49 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[திருப்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>
		<category><![CDATA[வைணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1229</guid>
		<description><![CDATA[நாள் முப்பது &#8211; பாடல் முப்பது வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறை கொண்டவாற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய். இருபத்தொன்பதாம் பாடல் பாவை நோன்பை நிறைவு செய்யும் பாடலாக அமைந்துளது. இப்பாடல் திருப்பாவையை நிறைவு செய்யும் பாடல். இப்பாடல்களைப் பக்தியோடு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் முப்பது &#8211; பாடல் முப்பது</p>
<p>வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்<br />
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி<br />
அங்கப் பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்<br />
பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன<br />
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே<br />
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்<br />
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்<br />
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்.</p>
<p>இருபத்தொன்பதாம் பாடல் பாவை நோன்பை நிறைவு செய்யும் பாடலாக அமைந்துளது. இப்பாடல் திருப்பாவையை நிறைவு செய்யும் பாடல். இப்பாடல்களைப் பக்தியோடு பாடுவோர் அடையும் நலன்களைச் சொல்கிறது. </p>
<p>இப்பாடல்களைப் பாடும் அனைவருக்கும் திருவருள் கிடைக்கும் என்ற உறுதியோடு பாடல் நிறைவுறுகிறது.</p>
<p>வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சொல்லிப் பாடல் ஆரம்பமாகிறது. இறைவனுக்குச் செய்யும் எந்த ஒரு வேண்டுகோளும் பிராட்டியாகிய இலக்குமி வழியாகச் செய்யும் போது நிச்சயம் நிறைவேறுகிறது என்பது வைணவர்கள் நம்பிக்கை. பாற்கடலை அமிர்தத்துக்காகக் கடைந்த போது தோன்றியவள் இலக்குமி. அதனாலேயே வங்கக் கடல் கடைந்த நிகழ்வு இப்பாடலில் சிறப்பிக்கப்படுகிறது. </p>
<p>திங்கள் திருமுகத்துச் சேயிழையார் எனும் போது திருந்திய வடிவமும் தீர்மானமான பக்தியும் கொண்டவர்கள் என்பதைக் குறித்தார்.</p>
<p>இருபத்தொன்பதாம் பாடலில் குறித்த எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான பறையாக எங்கும் திருவருள் கிடைக்கும் என்று அறுதியிடுகிறது முப்பதாம் பாடல்.</p>
<p>நாச்சியார் தோன்றிய திருவில்லிபுத்தூர் அணிபுதுவை என்று விளக்கம் பெறுகிறது. பெரியாழ்வாரும் நாச்சியாரும் ஆபரணமாகத் தோன்றிய ஊர் என்பதாம். </p>
<p>கோதை &#8211; </p>
<p>தமிழில் அழகிய பெண் என்று மட்டுமே பொருள்.<br />
வடமொழியில் கோதையெனில் தெய்விகப் பாடல்களைப்<br />
பாடியவள் என்று பொருள்.</p>
<p>இப் பாடலுடன் திருப்பாவை முப்பது பாடல்களுக்குமான விளக்கவுரை நிறைவு பெறுகிறது. </p>
<div align=center>
<object type="application/x-shockwave-flash" data="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" width="350" height="30"><param name="movie" value="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" /><param name="bgcolor" value="#ffffff" /><param name="FlashVars" value="mp3=http://sivasiva.wordpress.com/files/2010/01/30_vangkak_katal_kataintha.mp3&amp;width=350&amp;height=30&amp;volume=150&amp;showstop=1&amp;showvolume=1&amp;sliderwidth=25&amp;sliderheight=15&amp;volumeheight=15&amp;loadingcolor=ffeb05&amp;bgcolor1=1414ff&amp;bgcolor2=14baff&amp;slidercolor1=fffc0a&amp;slidercolor2=f0d700" /></object></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1229/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://sivasiva.wordpress.com/files/2010/01/30_vangkak_katal_kataintha.mp3&amp;amp" length="2177024" type="audio/mpeg" />
		</item>
		<item>
		<title>திருப்பாவை &#8211; 29</title>
		<link>http://siththan.com/archives/1226</link>
		<comments>http://siththan.com/archives/1226#comments</comments>
		<pubDate>Mon, 11 Jan 2010 07:01:22 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[திருப்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>
		<category><![CDATA[வைணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1226</guid>
		<description><![CDATA[நாள் இருபத்தொன்பது &#8211; பாடல் இருபத்தொன்பது சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே வோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய். இப்பாடலில் பாவை நோன்பின் குறிக்கோளை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள், பாவையர். விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் இருபத்தொன்பது &#8211; பாடல் இருபத்தொன்பது</p>
<p>சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்<br />
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்<br />
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ<br />
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது<br />
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா<br />
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு<br />
உற்றோமே வோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்<br />
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.</p>
<p>இப்பாடலில் பாவை நோன்பின் குறிக்கோளை வெளிப்படையாக அறிவிக்கிறார்கள், பாவையர்.</p>
<p>விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்வாய்.</p>
<p>பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது உனக்குத் தகுதியோ?</p>
<p>கோவிந்தா! இன்று(இப்பிறவி) மட்டுமல்ல. இன்னும் எத்தனை பிறவி எடுக்கினும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள்வாய்!</p>
<p>கோவிந்தன்:</p>
<p>ஆநிரைகள் ஆயர்களின் செல்வம். மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை &#8220;பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ&#8221; என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். </p>
<p>இதுவரைக்கும் பறை கேட்டனர் ஆயர்பாடிப் பெண்கள். வழக்கமான விளக்கத்தின்படி அப்பறை அல்லது பரிசில் வளம் தரும் மழையாகவும் ஏற்ற கணவன்மார் அமைதலும் ஆகும். பார்க்கப் போனால் பாவை நோன்பின் வேண்டுதல் மழை என்று கருதுவதே காலந்தப்பிப் போன வேண்டுதலாக அமைந்துவிடும். கார்த்திகை முதலிலேயே பருவ மழைக் காலம் முடிந்துவிடுகிறது.</p>
<p>மார்கழி மாதம் குளிர்காலம். தைமாதம் அறுவடைக் காலம். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள். எனவே பாவை நோன்பை செழிப்பான அறுவடைக்கான பிரார்த்தனையாகக் கொள்வதே சரி.</p>
<p>சமூகம் செழிப்பை வேண்டத் தனிப்பட்ட முறையில் மணவாழ்வு வேண்டுவதாகப் பாவை நோன்பு அமைகிறது என்று கொள்வது<br />
சரியானதாகத் தெரிகிறது. அறுவடையும் திருமணமும் வளத்தைக் குறிப்பிடுகின்றன.</p>
<p>திருப்பாவையின் திரு என்ற அடைமொழியைக் கருத்தில் கொண்டால் அறுவடையும் நல்வாழ்வும் தாண்டிப் புனிதமான ஒன்றைக் வேண்டுவதாக  அமைய வேண்டும். மழை என்றவிடத்துக் கடவுளின் கருணை மழை என்று கொள்ளலாம். இறைவனோடு இணைந்துவிடுதல் மணம் என்று கொள்ளலாம்.</p>
<div align=center>
<object type="application/x-shockwave-flash" data="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" width="350" height="30"><param name="movie" value="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" /><param name="bgcolor" value="#ffffff" /><param name="FlashVars" value="mp3=http://sivasiva.wordpress.com/files/2010/01/29_sirram_sirukaalai_vanthunnai.mp3&amp;width=350&amp;height=30&amp;volume=150&amp;showstop=1&amp;showvolume=1&amp;sliderwidth=25&amp;sliderheight=15&amp;volumeheight=15&amp;loadingcolor=ffeb05&amp;bgcolor1=1414ff&amp;bgcolor2=14baff&amp;slidercolor1=fffc0a&amp;slidercolor2=f0d700" /></object></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1226/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://sivasiva.wordpress.com/files/2010/01/29_sirram_sirukaalai_vanthunnai.mp3&amp;amp" length="2160640" type="audio/mpeg" />
		</item>
		<item>
		<title>திருப்பாவை &#8211; 28</title>
		<link>http://siththan.com/archives/1223</link>
		<comments>http://siththan.com/archives/1223#comments</comments>
		<pubDate>Mon, 11 Jan 2010 06:40:31 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[திருப்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>
		<category><![CDATA[வைணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1223</guid>
		<description><![CDATA[நாள் இருபத்தெட்டு &#8211; பாடல் இருபத்தெட்டு கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய். நாங்கள் ஆயர்கள். கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்த்து, அவைகள் உண்ணும்போது நாங்களும் உண்பவர்கள். அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் இருபத்தெட்டு &#8211; பாடல் இருபத்தெட்டு</p>
<p>கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்<br />
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்<br />
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்<br />
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு<br />
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது<br />
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்<br />
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே<br />
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.</p>
<p>நாங்கள் ஆயர்கள். கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்த்து, அவைகள் உண்ணும்போது நாங்களும் உண்பவர்கள். அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆயர் குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம்.</p>
<p>குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.</p>
<p>குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:</p>
<p>மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் ஆயர் குலத்தில் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். ஆன்மா தன்னுடைய இறைத் தொடர்பை உணரத் தவறிய போதும் இறைவனுக்கு ஏதும் குறையில்லை என்று கொள்ள வேண்டும். </p>
<p>இப்பாடலில் ஆன்மாவின் இயல்பு, ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு, உடலெடுத்த ஆன்மா இறைவனை நோக்கிய வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய சரியான மனப்பாங்கு ஆகியவை பற்றி விளக்குகிறது.</p>
<p>உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது:</p>
<p>கடவுள் பரிபூரணம். ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு முடிவில்லாதது என்று பொருள். இதையே அந்த உறவைப் புரிந்து கொள்ளும் வரை வாழ்வோடான பிணைப்பை அறுக்க முடியாது என்றும் பொருள் கொள்ளலாம். எனவே ஆன்ம இறைத் தொடர்பை ஆன்மா உணராமல் இருப்பதாலோ மறுத்துவிடுவதாலோ துணித்துவிடுவதாலோ அது இல்லாமல் போய்விடுவது இல்லையாகும்.</p>
<p>அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து:</p>
<p>ஆயர்பாடிப் பெண்டிரின் வாழ்வு கறவையினத்தைச் சார்ந்தது. அன்றாடக் கடமைகளைக் கவனிப்பதால், இறைவனை அவர்கள் மறந்து விட்டிருக்கலாம். அல்லது இறைவனை உணரும் அளவுக்கு உணர்வு, அறிவுக் கூர்மையற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் மத்தியில் கண்ணன் தோன்றி வந்திருப்பது இறைவனின் கருணையே.</p>
<p>இப்படிப்பட்ட எங்கள்மேல் உன் கருணை மழையைப் பெய்விக்க வேண்டும் என்பதே வேண்டுதல்.</p>
<p>உடலெடுத்த வாழ்வே அறியாமைக்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. அவதாரங்களில் தன்னை மானுடச் சூழலில் வெளிப்படுத்துவது இறைவனின் மிகப் பெரிய கருணைக்கு அடையாளமாகிறது. அதனால்தான் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில் இறைவனைப் பெற்றிருப்பதைச் சிறப்பிக்கின்றனர்.</p>
<p>இறைவனோடான ஆன்மாவின்தொடர்பு தவிர்க்கவியலாத ஒன்று. அதனால்தான் உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்கிறார்கள்.</p>
<p>ஆன்மா இவ்வுலக பந்தங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. என்றாலும் இறைவன் எப்போதும் ஆன்மாவுக்கு அருகிலேயே இருக்கிறான். ஆயினும் இறைவனை அறிந்து கொள்ளும் அளவுக்கு ஆற்றல் அற்றவனாகவே ஆன்மா இருக்கிறது. எனவே என்னதான் செய்து எப்படித்தான் இருந்தாலும் தன் ஈடேற்றத்தை ஆன்மா தன் காரியங்கள், பாவனைகள் மூலம் சாதித்துக் கொள்ள முடியாது. எனவே ஈடேற்றத்துக்கான ஒரே வழி தன் எல்லைகளை அறிந்து இறைவனிடம் முழுக்கச் சரணடைந்துவிடுவதே.</p>
<div align=center>
<object type="application/x-shockwave-flash" data="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" width="350" height="30"><param name="movie" value="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" /><param name="bgcolor" value="#ffffff" /><param name="FlashVars" value="mp3=http://sivasiva.wordpress.com/files/2010/01/28_karavaikal_pin_senru.mp3&amp;width=350&amp;height=30&amp;volume=150&amp;showstop=1&amp;showvolume=1&amp;sliderwidth=25&amp;sliderheight=15&amp;volumeheight=15&amp;loadingcolor=ffeb05&amp;bgcolor1=1414ff&amp;bgcolor2=14baff&amp;slidercolor1=fffc0a&amp;slidercolor2=f0d700" /></object></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1223/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://sivasiva.wordpress.com/files/2010/01/28_karavaikal_pin_senru.mp3&amp;amp" length="2023424" type="audio/mpeg" />
		</item>
		<item>
		<title>திருப்பாவை &#8211; 27</title>
		<link>http://siththan.com/archives/1220</link>
		<comments>http://siththan.com/archives/1220#comments</comments>
		<pubDate>Mon, 11 Jan 2010 02:08:30 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[திருப்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>
		<category><![CDATA[வைணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1220</guid>
		<description><![CDATA[நாள் இருபத்தேழு &#8211; பாடல் இருபத்தேழு கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாறக் கூடியிருந்து குளிர்ந்தோலோர் எம்பாவாய். உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லும் சீரிய கோவிந்தா! இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் இருபத்தேழு &#8211; பாடல் இருபத்தேழு</p>
<p>கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்<br />
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சன்மானம்<br />
நாடு புகழும் பரிசினால் நன்றாக<br />
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே<br />
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்<br />
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு<br />
மூட நெய்பெய்து முழங்கை வழிவாறக்<br />
கூடியிருந்து குளிர்ந்தோலோர் எம்பாவாய்.</p>
<p>உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லும் சீரிய கோவிந்தா!</p>
<p>இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அகிலத்து மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் பெற்றிடுவோம்.</p>
<p>நோன்பிற்காக வைத்துள்ள அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம். தோள் வளையங்கள் அணிவோம். தோடணிவோம். கைகளில் வளையல்கள் அணிவோம். செவியில் செவிப்பூ அணிவோம். கால்களில் பாடகம் அணிவோம். இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம். புது பட்டணிவோம்.</p>
<p>அதன் பின், பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய உன்னுடன் கூடி உண்ணுவோம். அதன்பின்னாவது மனம் இரங்கி நீ எங்களுக்கு நாங்கள் கேட்பதைத் தா!</p>
<p>கோவிந்தன்:<br />
மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன். </p>
<p>&#8220;கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா&#8221;:<br />
பசுக்கள் ஆயர்களின் செல்வம். அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் எனலாம். உன்னை கூடி மகிழாது ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வெல்லுகிறவன் என்றும் கொள்ளலாம்.</p>
<p>இப் பாடல் பாவை நோன்புக்கான கலங்களைப் பட்டியலிடுகிறது.</p>
<p>அருச்சுனனின் சாரதியாகக் கண்ணன் பயன்படுத்தியது பாஞ்ச சன்னியம். அதே சங்கைக் கொண்டுதான் ஆநிரைகளை ஒருங்கு சேர்த்தானாம் கண்ணன். கோயில் வழிபாடுகளில் பயன்படுவதும் இந்தச் சங்கே. அப்படியான சங்கை ஒவ்வொரு பாவைக் கன்னிக்கும் கண்ணன் அருள்கிறான்.</p>
<p>ஈரடிகளால் உலகளந்தபோது ஜாம்பவான் முழக்கியது பறை. அதே பறைதான் ராமன் ராவணனை வெற்றி கொண்டபோதும் முழங்கியது.</p>
<p>கொடி கருடக்கொடி.</p>
<p>விதானம் மதுரையிலிருந்து ஆய்ப்பாடிக்குக் கண்ணனைக் கொண்டு செல்லும் போது மழைக்குக் குடையாக வந்த ஆதிசேஷன்.</p>
<p>இப்படியாக வேண்டிய பறைகள் அனைத்தும் தந்தருளிவிட்ட பின்னும் இன்னும் சில பரிசுகள் கேட்கிறார்கள் பாவையர். ஆபரணங்களும் அணிமணியும் பூண்டு இறைவனோடு இருந்து போசனமும் செய்ய வேண்டுமாம்.</p>
<p>தன்னுடையது என்றிருந்த அனைத்தையும் ஏற்கெனவே துறந்துவிட்டவர்கள் பாவை நோன்பிருக்கும் கன்னியர். எனவே இனித் தமக்கென வேண்டுவது தமக்காவதாக இருக்கப் போவதல்ல.</p>
<p>இறைவனுடையதை இறைவனின் அருளாக அணிந்து கொள்ளப் போகிறார்கள். இறைவனின் அருளையே ஆடையாகவும்<br />
அணிகலனாகவும் பூண்டு மூட நெய் பெய்த பாற்சோறாக உண்ணப் போகிறார்கள்.</p>
<p>உண்ணும் உணவும் பருகும் நீரும் நாரணனாகவே ஆகிப் போகின்றன. பசித்தவன் உண்பதையல்ல இவர்கள் பேசுவது. இறைவனோடு இருத்தலைக் கொண்டாடி கூடியிருந்து விருந்தாடலைக் குறிக்கிறார்கள்.</p>
<div align=center>
<object type="application/x-shockwave-flash" data="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" width="350" height="30"><param name="movie" value="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" /><param name="bgcolor" value="#ffffff" /><param name="FlashVars" value="mp3=http://sivasiva.wordpress.com/files/2010/01/27_kootarai_vellum_seer.mp3&amp;width=350&amp;height=30&amp;volume=150&amp;showstop=1&amp;showvolume=1&amp;sliderwidth=25&amp;sliderheight=15&amp;volumeheight=15&amp;loadingcolor=ffeb05&amp;bgcolor1=1414ff&amp;bgcolor2=14baff&amp;slidercolor1=fffc0a&amp;slidercolor2=f0d700" /></object></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1220/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://sivasiva.wordpress.com/files/2010/01/27_kootarai_vellum_seer.mp3&amp;amp" length="2199552" type="audio/mpeg" />
		</item>
		<item>
		<title>திருப்பாவை &#8211; 26</title>
		<link>http://siththan.com/archives/1217</link>
		<comments>http://siththan.com/archives/1217#comments</comments>
		<pubDate>Mon, 11 Jan 2010 01:27:51 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[திருப்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>
		<category><![CDATA[வைணவம்]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1217</guid>
		<description><![CDATA[நாள் இருபத்தாறு &#8211; பாடல் இருபத்தாறு மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன போலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்களே போய்ப்பாடுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய். ஊயர்ந்தவனே! மேன்மைமிகுந்தவனே! திருமாலே! நீல நிற மணியின் வண்ணத்தை ஒத்தவனே! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்பாயாகில்&#8230;&#8230; முழங்கும்போது அகிலத்தை நடுங்கவைக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் இருபத்தாறு &#8211; பாடல் இருபத்தாறு</p>
<p>மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்<br />
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்<br />
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன<br />
போலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே<br />
போல்வன சங்கங்களே போய்ப்பாடுடையனவே<br />
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே<br />
கோல விளக்கே கொடியே விதானமே<br />
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.</p>
<p>ஊயர்ந்தவனே! மேன்மைமிகுந்தவனே! திருமாலே! நீல நிற மணியின் வண்ணத்தை ஒத்தவனே! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்பாயாகில்&#8230;&#8230;</p>
<p>முழங்கும்போது அகிலத்தை நடுங்கவைக்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும். ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும். எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும். ஆலிலையில் பள்ளிகொண்டவனே! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.</p>
<p>இப் பாடல் பாவை நோன்புக்கானவற்றைக் கேட்பதாக அமைந்திருக்கிறது. சங்கு, பறை, கொடி, விதானம் ஆகியவற்றோடு இறைவனைப் பாடும் அடியார்களின் சங்கத்தையும் வேண்டிப் பாடுகிறார்கள்.</p>
<p>பாடலில் முதலடியில் இறைவனை “மாலே” என்று அழைக்கிறார் ஆண்டாள். உயர்ந்தவர், மேன்மையானவர் என்று பொருள் கூறலாம். என்றாலும் இறைவனின் உயர்வுக்கு என ஒரு சிறப்பு உண்டு. </p>
<p>மணிவண்ணன் என்பது இறைவனுக்குத் தரப்பட்டுள்ள மறுபெயர். நீலமணியைக் குறித்து எழுந்த பெயர். நாராயணர் நிறம் பற்றி மழை மேகத்தோடும்  குவளை மலர்களோடும் நீலமணியோடும் பேசுவது வழக்கம்.</p>
<p>ஆன்மா தன் இயல்பான இருப்பில் இறைவனோடு இடையறாச்<br />
சம்பந்தம் கொண்டது. பிறப்பெடுத்து வந்த போது அந்தச் சம்பந்தத்தை இழந்துவிட்டது. இழந்துவிட்ட இறைச் சம்பந்தம் நோக்கி ஏங்கி பாவை நோன்பில் சங்கு, பறை, கொடி, விளக்கு, விதானம், சாமரம், கண்ணாடி என்று அனைத்தையும் கொண்டு இறைவனோடு இருக்கும் உணர்வை அனுபவித்தலின் வெளிப்பாடாக அமைகிறது இப்பாடல்.</p>
<div align=center>
<object type="application/x-shockwave-flash" data="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" width="350" height="30"><param name="movie" value="http://flash-mp3-player.net/medias/player_mp3_maxi.swf" /><param name="bgcolor" value="#ffffff" /><param name="FlashVars" value="mp3=http://sivasiva.wordpress.com/files/2010/01/26_maale_manivannaa.mp3&amp;width=350&amp;height=30&amp;volume=150&amp;showstop=1&amp;showvolume=1&amp;sliderwidth=25&amp;sliderheight=15&amp;volumeheight=15&amp;loadingcolor=ffeb05&amp;bgcolor1=1414ff&amp;bgcolor2=14baff&amp;slidercolor1=fffc0a&amp;slidercolor2=f0d700" /></object></div>
<div align=center>
<a href="http://saibaba.siththan.com/"><br />
SHIRDI SAIBABA </a> | <a href="http://homoeo.siththan.com/">HOMOEOPATHY </a><a href="http://psycho.siththan.com/">|    PSYCHIC SCIENCES </a><br />
<a href="http://how.siththan.com/">HOW? WHY? WHAT?</a> | <a href="http://melodies.siththan.com/"> </a><a href="http://melodies.siththan.com/">GOLDEN MELODIES</a> | <a href="http://bannersforblogweb.blogspot.com/">BANNERS FOR WEB</a><br />
<a href="http://shridisaibaba.siththan.com/">சீரடி சாயிபாபா</a>  |  <a href="http://iniyavaikal.blogspot.com/">செவிக்கினிய பாடல்கள்</a>  <br />  <a href="http://sivayasiva.blogspot.com/">சிவசிவ</a>  |  <a href="http://siththan.com/">சித்தன்</a>  |  <a href="http://koyil.siththan.com/">ஆலயங்கள்</a></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1217/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
<enclosure url="http://sivasiva.wordpress.com/files/2010/01/26_maale_manivannaa.mp3&amp;amp" length="2000896" type="audio/mpeg" />
		</item>
	</channel>
</rss>

