Archive for 'மற்ற சமயங்கள்'
கந்தர் கலிவெண்பா – 14
தோய்ந்த நவரத்னச் சுடர்மணியாற் செய்தபைம் பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்த பிறைத்
துண்டமிரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதற் பொட்டழகும் – விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்(கு)
அருள்பொழியுங் கண்மலர் ஈராறும் – பருதி
பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் – நிலவுமிழும்
தேய்ந்த பிறை = குறந்த பிறை(நிலா)
துண்டம் = துண்டு, பிளவு
நிரை = வரிசை
புண்டரம் = கோடு பதித்தது போன்ற நுதல்
புண்டரம் பூத்த நுதல் எனக் கொள்க.
விண்ட = விரிந்த
பருவ மலர் = நாள் [...]
Posted: November 26th, 2008 under கந்தர் கலிவெண்பா, திருவாசகம், பக்தி, மற்ற சமயங்கள்.
Comments: none
குர்பானி
வரலாறு
*********
பரிசுத்த ஹக்கின் திருவருள் கொண்டு நண்பர் சிவாவின் வினாவுக்கு விடை கூறுகிறோம்.
நான் கூறும் விளக்கத்தில் தவறேதும் இருப்பின் சினமுறாது நல்ல, சரியான பொருளை மற்ற நண்பர்களுக்கும் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
“என்னிடமிருந்து கற்றதை பிறருக்கு அறியச் செய்துவிடுங்கள்” என ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிப் பெருமகனார் கூறியதை நினைவுகூருக. (மார்க்க)ஞானத்தைத் தெரியாதவர்களுக்குச் சொல்லிகொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரின் மீதும் உள்ளது அல்லவா?
குர்பானி = தியாகம்
குர்பானி என்பது தொழுகையைப்போல் ஒரு வழிபாடு. ஆகவே. அதை அல்லாஹ்வின் பெயரால் மட்டுமே தவிர வேறு [...]
Posted: April 4th, 2008 under பக்தி, மற்ற சமயங்கள்.
Comments: none
