<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Siththan.com &#187; சைவம்</title>
	<atom:link href="http://siththan.com/archives/category/%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://siththan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 20 Aug 2011 04:02:11 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>வேதப் பிராமணத்தி &#8211; வெள்ளாள அரசி ?</title>
		<link>http://siththan.com/archives/2251</link>
		<comments>http://siththan.com/archives/2251#comments</comments>
		<pubDate>Tue, 07 Jun 2011 12:48:40 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=2251</guid>
		<description><![CDATA[குலதெய்வத்தைத் தேடிக்கொண்டுள்ளேன். வேதப் பிராமணத்தி யார்? வெள்ளாள அரசி  யார்? காராளன் எங்குள்ளார்? இவ்வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் அறிவுறுத்தவும்]]></description>
			<content:encoded><![CDATA[<p>குலதெய்வத்தைத் தேடிக்கொண்டுள்ளேன்.</p>
<p>வேதப் பிராமணத்தி யார்?</p>
<p>வெள்ளாள அரசி  யார்?</p>
<p>காராளன் எங்குள்ளார்?</p>
<p>இவ்வினாக்களுக்கு விடை தெரிந்த நண்பர்கள் அறிவுறுத்தவும்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/2251/feed</wfw:commentRss>
		<slash:comments>16</slash:comments>
		</item>
		<item>
		<title>திருவெம்பாவை &#8211; 20</title>
		<link>http://siththan.com/archives/1276</link>
		<comments>http://siththan.com/archives/1276#comments</comments>
		<pubDate>Thu, 14 Jan 2010 11:44:40 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[திருவாசகம்]]></category>
		<category><![CDATA[திருவெம்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1276</guid>
		<description><![CDATA[நாள் இருபது &#8211; பாடல் இருபது போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது. எல்லா [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் இருபது &#8211; பாடல் இருபது</p>
<p>போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்<br />
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்<br />
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்<br />
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்<br />
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்<br />
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்<br />
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்<br />
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.</p>
<p>திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது.</p>
<p>எல்லா உயிர்க்கும் ஆதியும் அந்தமும், தோன்றும் இடமும், போகங்கள் விளையும் களமும், முடிவான இடமுமாய் இருப்பவை இறைவன் திருவடிகள். பிரமனும் இந்திரனும் காண முடியாத பெருமை பெற்றவை. அந்தத் திருவடிகளே தம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய்.</p>
<p>இப்பாடல் இறைவனின் ஐந்தொழில்களையும் குறிக்கிறது; திருவெம்பாவையின் நிறைவுப் பாடலாக மங்கலப் போற்றியாக அமைகிறது. ஐந்தொழிலும் அறுவகைக் காவலும் எட்டுப்  போற்றிகளும் தனக்குள்ளே கொண்டது இப்பாடல்.</p>
<p>இந்தப் பாடல் இறைவனுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்துவிட்டுச் சரணடைந்து விடுவதைப் பற்றிப் பேசுகிறது. தோன்றியது இறைவனிடமிருந்து. வாழ்வது அவனால். உடலெடுத்த வாழ்விலிருந்து நீக்கப்படுவதற்கு எதிர்நோக்கிக் கிடப்பது அவன் அருளையே. என்னதான் முயன்றாலும் இன்னார்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடிவிலும் செயலிலும் அருமை கொண்டவன். அவனையல்லால் வேறு யாரிடம் சரணடைவது? எனவே இப்பாடல் அவன்தாள் சரணடைவதைப் போற்றி முடிகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1276/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருவெம்பாவை &#8211; 19</title>
		<link>http://siththan.com/archives/1273</link>
		<comments>http://siththan.com/archives/1273#comments</comments>
		<pubDate>Thu, 14 Jan 2010 11:42:58 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[திருவாசகம்]]></category>
		<category><![CDATA[திருவெம்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1273</guid>
		<description><![CDATA[நாள் பத்தொன்பது &#8211; பாடல் பத்தொன்பது உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் பத்தொன்பது &#8211; பாடல் பத்தொன்பது</p>
<p>உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று<br />
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்<br />
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்<br />
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க<br />
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க<br />
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க<br />
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்<br />
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.</p>
<p>இப்பாடல் பக்தி வைராக்கியத்தை விளக்குகிறது. பக்தர்களாகிய நாங்கள் பக்தர்களன்றி வேறு எவரோடும் தொடர்புடையவர்கள் ஆக மாட்டோம் என்ற வைராக்கியமே இப்பாடலின் கரு.</p>
<p>உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனெனில் அது தேவையற்ற ஒன்று. எங்களின் பெருமானே! உனக்கு ஒன்று சொல்லுகிறோம். கேடபாயாக. நாங்கள் உன் மெய் அடியார்களையே மணந்துகொள்வோம். உனக்கே நாங்கல் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் உன்னையே நாங்கள் எப்பொழுதும் காணவேண்டும். இறைவா! இவ்வாய்ப்பினை நீ எங்களுக்குத் தந்தருள்வாயாகில், பிறகு கதிரவனே செல்லும் தடம் மாறினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பாவையே! இப்பெரு நிலையை ஓர்ந்து உணர்ந்து ஏற்றுக்கொள்.</p>
<p>பாவை நோன்பிருக்கும் கன்னியர் இப் பாடலில் தங்களின் வேண்டுதல்களை வெளியிடுகிறார்கள். முதலில் எடுத்த பிறவிதோறும் இறைவனுக்குத் தாம் தொண்டர்களாக இருந்ததை அறுதி செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களாகிய நாங்கள் உன்னிடம் கூறிக் கொள்ள ஒன்று உண்டு என்று சொல்லும் போது சொல்ல வருவது வைராக்கியத்தை அறிவித்துக் கொள்வதே.</p>
<p>அவன் அடியார்களுக்கே தாம் அடியார்களாவோம். வாழும் எவரும் வாழும் வரையிலும் உலகியலைத் தவிர்க்க முடிவதில்லை. எனவே இல்லறம் கூட அறத்தாற்றில் நடத்த வேண்டுமானால் அதற்கு இலக்கால் ஒன்றிய வாழ்க்கைத் துணை தேவை. அத்தகைய தேவை அமையப் பெற்றபின் எங்கு என்ன நடந்தால் என்ன என்ற விட்டேற்றி மனப்பான்மையை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.</p>
<p>பாவையர் இறைப் பணிக்கான வாழ்வை வரமாகக் கேட்பது தெளிவாகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1273/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருவெம்பாவை &#8211; 18</title>
		<link>http://siththan.com/archives/1270</link>
		<comments>http://siththan.com/archives/1270#comments</comments>
		<pubDate>Thu, 14 Jan 2010 11:41:18 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[திருவாசகம்]]></category>
		<category><![CDATA[திருவெம்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1270</guid>
		<description><![CDATA[நாள் பதினெட்டு &#8211; பாடல் பதினெட்டு அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித் கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். பெண்ணே! திருவண்ணாமலை யானுடைய தாமரைத் திருவடியில் சென்று வணங்கும் அமரர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் கதிரவன் எழுந்ததும் விண்மீன்கள் ஒளியிழப்பதைப்போல் சிவனின் திருவடிப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் பதினெட்டு &#8211; பாடல் பதினெட்டு</p>
<p>அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்<br />
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்<br />
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்<br />
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்<br />
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்<br />
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்<br />
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்<br />
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.</p>
<p>பெண்ணே! திருவண்ணாமலை யானுடைய தாமரைத் திருவடியில் சென்று வணங்கும் அமரர்கள் முடியில் அணிந்துள்ள இரத்தினங்கள் கதிரவன் எழுந்ததும் விண்மீன்கள் ஒளியிழப்பதைப்போல் சிவனின் திருவடிப் பேரொளியின்முன் ஒளியிழந்து விடுகின்றன. </p>
<p>எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1270/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>திருவெம்பாவை &#8211; 17</title>
		<link>http://siththan.com/archives/1267</link>
		<comments>http://siththan.com/archives/1267#comments</comments>
		<pubDate>Thu, 14 Jan 2010 11:38:25 +0000</pubDate>
		<dc:creator>ஞானவெட்டியான்</dc:creator>
				<category><![CDATA[சைவம்]]></category>
		<category><![CDATA[திருவாசகம்]]></category>
		<category><![CDATA[திருவெம்பாவை]]></category>
		<category><![CDATA[பக்தி]]></category>

		<guid isPermaLink="false">http://siththan.com/?p=1267</guid>
		<description><![CDATA[நாள் பதினேழு &#8211; பாடல் பதினேழு செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். இப் பாடல் பொழுது புலரும் நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள் ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாள் பதினேழு &#8211; பாடல் பதினேழு</p>
<p>செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்<br />
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்<br />
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி<br />
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்<br />
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை<br />
அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை<br />
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்<br />
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.</p>
<p>இப் பாடல் பொழுது புலரும் நேரத்தில் பொய்கையில் நீராடப் போகும் கன்னியருள் ஒருத்தி தன்னுடன் வரும் மற்றவளைப் பார்த்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.</p>
<p>இயல்பாகவே மணமுடைய கரிய கூந்தலையுடையவளே! திருமால், பிரம்மா ஆகிய அமரர்களும் அனுபவித்திராத இன்பத்தை நம்மையும் ஒரு பொருட்டாகக் கொண்டு அருளியவன் இறைவன். நம் குற்றங்கள் களையப்படும்போது அது அநுபூதி ஆகிறது. அதற்காக இறைவன் நம் நெஞ்சமாகிய இல்லங்கள்தோறும் தேடி வந்து குடி புகுந்தவன். செந்தாமரை போன்ற திருவடியை நமக்குத் தந்தருளும் வள்ளல் அவன். கருணை மிகுந்த கண்களையுடைய அரசன் அவன். அடியவர்களாகிய நம் போன்றவர்க்கு அமுதென வாய்த்தவனைப் பாடுவோம். சிவஞானமெனும் நலம் அவனிடமிருந்து நமக்கு வருகிறது. தாமரைத் தடாகத்தில் மூழ்கி நீராடி அவன் பெருமை பாடுவோம். தோழி! நீ ஓர்ந்து பார்த்து ஏற்றுக்கொள்.</p>
<p>குழந்தை கையில் கிடைத்த பொற்கிண்ணத்தின் அருமை அக்குழந்தைக்குத் தெரியாது. அதுபோல் நமக்கு வாய்த்துள்ள இறைவனின் கருணைத் திறத்தை அறியாதவர்கள் நாம். வலிய வந்து வழங்கப் பெற்ற இறையருளின் அருமை உணரும் போது அது நமது செல்வமாகிறது.</p>
<p>எந்தக் கேள்வியும் இல்லாமல் இறைவன் மனிதன் மேல் பொழிவது அருள்.  </p>
<p>இப்பாடலில் பாவை சொல்வது அடிப்படைப் பாவபீடிப்பே அன்றி அவள் அறிந்து செய்த அல்லது செய்யத் தவறிய காரியங்களின் பாற்பட்ட பாவம் அன்று.</p>
<p>இறைவன் ஆன்மாக்களை ஈடேற்றியே தீர்வது என்ற தீர்மானத்தில் இருப்பவன் இறைவன் என்பதால் இறைவனை சேவகன் என்கிறார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://siththan.com/archives/1267/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

