Archive for 'கந்தர் கலிவெண்பா'
1500ஆம் பதிவு – கந்தர் கலிவெண்பா – 30
30.அங்கமிரு கூறா யடல்மயிலுஞ் சேவலுமாய்த் துங்கமுட னார்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள் சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்து மிளையோனே – மாறிவரு சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென மேவற் தனித்துயர்த்த மேலோனே – மூவர் குறைமுடித்து விண்ணங் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்தாட் கொண்டளித்த தேவே – மறைமுடிவாஞ் சேவற் பகையை – பகைவனாகிய சேவல்(சூரன்) பதாகை – கொடி தனித்துயர்த்திய – மேலாக உயர்த்தி மூவர் – மும்மூர்த்திகள் விண்ணம் – தேவர் உலகம் [...]
Posted: April 6th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none
கந்தர் கலிவெண்பா – 29
29. சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன் வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய தானவர்கள் நாற்படையுஞ் சங்கரித்துப் – பானு பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடித்த வாரி தனிற்புதிய மாவாய்க் கிடந்தநெடுஞ் சூருடலங் கீண்ட சுடர்வேலோய் – போர வுணன் விசய வீரன் – வீரவாகு காரவுணன் – கரிய அரக்கன் தானவர்கள் – அசுரர்கள் நாற்படை – யானை, தேர், குதிரை, காலாட்படை [...]
Posted: April 1st, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none
கந்தர் கலிவெண்பா – 28
28. பொன்னங் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே – கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியுந் தூளாக வீர வடிவேல் விடுத்தோனே – சீரலைவாய்த் தெள்ளுதிரை கொழிக்குஞ் செந்தூரிற் போய்க்கருணை வெள்ளமெனத் தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக் கயேந்திரனுக் கஞ்ச லளித்துக் கடல்சூழ் மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச் – சயேந்திரனாம் கடுக்கை – கொன்றை பிரமம் – பிரணவத்தின் பொருள் கொன் – வலிமையுள்ள மாயத் தடங்கிரி – மாயையுடன் கூடிய பெரிய மலை அலைவாய் [...]
Posted: March 29th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none





