Archive for 'பக்தி'
ஆன்மிகம் ஒட்டுமா?
தமிழ்நாட்டில் ஆசையூர் என்ற ஊரில் ஒரு மீசைக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பலாப்பழம் சாப்பிடக் கொள்ளை ஆசை. ஒருநாள் நடந்து சென்ற போது, ஒரு தோட்டத்தைக் கண்டார். அங்கிருந்த பலாமரம் அவரை வா! வா! என அழைத்தது. மரத்தில் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்கி மணம் வீசிக் கொண்டிருந்தன. மீசைக்காரர் அந்தப் பழத்தை எப்படியாவது சாப்பிட வேண்டும் என முடிவு செய்து விட்டார். பலாப்பழம் சாப்பிட்டால் அதிலுள்ள பசை கையிலும் மீசையிலும் ஒட்டுமே! என்ன செய்யலாம் என்று [...]
Posted: August 19th, 2010 under கதைகள், பக்தி.
Comments: 1
மின் – நூல் – கந்தர் கலிவெண்பா
அன்புடையீர், என் இணைய தளத்தில் வெளிவந்த “கந்தர் கலிவெண்பா” என்னும் பக்தி நூலை மின் – நூலாக்கித் தந்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது என் முதல் முயற்சி. தவறுகளையும், மேம்படுத்தக் கருத்துக்களையும் njaanam@gmail.com மூலம் அனுப்பவும்.
Posted: May 24th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: 2
கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி
கந்தர் கலிவெண்பா – 32 இறுதிப் பகுதி ****************************** 32.திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையும் ஈரா(று) அருள்விழியு மாமுகங்க ளாறும் – விரகிரணம் சிந்தப் புனைந்த திருமுடிக ளோராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண் எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந்(து) உல்லாசமாக உளத் திருந்து – பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமுஞ்சீர்ப் பேசுமியல் பல்காப்பி யத்தொகையும் – ஓசை எழுத்துமுத லாமைந்தி லக்கணமுந் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்(து) – ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பி லிருவா [...]
Posted: April 13th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none


