ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'துதி'

ஞானம் எட்டி-23

ஞானம் எட்டி-23 23. திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச் ……. சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி ……. மதனகலி யாணதிரு வல்லி மாது வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு …….. மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த …… கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே. ஏழு திரைச் சீலைகளைக் கடந்து, அதற்குமேலுள்ள பெரிய பாழ்(ஆகாயம், சூனியம், வெற்றிடம்) தாண்டி, சாகாக்காலும் வேகாத் தலையுந்தாண்டி, மறை புகுந்து [...]

ஞானக் குறள்-(91-100)

1.வீட்டுநெறிப்பால் ***************************** 10.பத்தியுடைமை (91-100) ***************************************   91.பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில் முத்திக்கு மூலமது.   (பத்தி – ஒன்றிலே ஊன்றிய மனம்; முத்தி – மவுன வித்தை) யோக வழி நிற்போன் நிலையான மனத்தொடு அசைவற்ற நிலையில் தன்னுள்ளே விரும்பி இறைஞ்சி சிவத்தைக் கூர்ந்து நோக்க மவுன வித்தை கைவரப் பெறும்.   92.பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவ சிந்தையால்.   (பாடியும் – பத்துவித நாதங்களை எழுப்பிச் சுரங்களோடு மனதை [...]

ஆஞ்சனேயன் துதி

ஆஞ்சநேயன் துதி ****************** ஆஞ்சநேயன் துதி ******************** மிகச் சிவந்த முகமுடைய வானரன் …..மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன் பகை யழித்திடும் வாயுவின் புத்திரன் …..பாரிசாத மர நிழல் வாழ்பவன் ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன் …..ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன். அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன் ……ஆளும் இராமனின் நாமம் கேட்டிடில் சிரத்தின் மீதிவன் கூப்பிய கையுடன் ……திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன் ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின் ……ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின் சித்த வேகமும் வாயுவின் வேகமும் ……சேர்ந்தவன் [...]