ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Archives

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Tamil Blogs & Sites

Tamil 10 top sites [www.tamil10 .com ]
Tamil Top Blogs free counters

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது ulavu.com

Archive for 'அம்மை ஆயிரம்'

ஞானம் எட்டி-51

51.அண்டபிண்டபுவனத்துக்கும் சந்திரனொளி ………ஆதித்தவருருவு மானதெங்கே சண்டப்பிரசண்டமதாய் மந்திரமோதுஞ் சவுங்கலே ………..தானறியாய்ச் சாற்றிடுவீர்காண் உண்டதோருணவறியார் உவரசத்தினுப்பு ………….வினுவரகற்றி யுண்டுமறியார் கண்டபொருள் விண்டதறியார் கல்லுப்புவந்த …………..காரணத்தைக் கண்டறியாக் கர்மிகளே கேள். ஆடம்பரமாய் ஏகப்பட்ட சத்தங்கள் செய்து மகாசிறப்புடனே மந்திர உச்சடானஞ் செய்கின்ற அறிவு மழுங்கியோரே! உண்டவுணவை யுணராமலும், உவர்ப்பூமியிலுண்டான உப்பையெடுத்து அதனிடமுள்ள உவர்ப்புச் சுவையை நீக்கி அதை உண்ண அறியாமலும், கண்ணால் கண்ட பொருட்களைச் சொல்ல அறியாமலும் கல்லுப்பு வந்த காரணத்தை அறியாமலுமிருக்கின்ற கர்மிகளே! நீங்கள் அண்ட பிண்ட சராசரங்கள் [...]

ஞானம் எட்டி-33

33.அறுந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ அச்செனும் பாவமது கண்டமட்டும் சிறந்ததுநூல் பிணைக்கும் சிவசிவ சித்திரச் சாம்புவ னான்காணும் பரந்தபஞ் சதுநூலாம் இழைபிசகா பறைநூ லதுபஞ்ச வர்ணமதாய் நிரந்தர விசிதமெனும் சிவசிவ நிட்டைதனில் மிகுந்த நிர்மலன் காண். அச்சு – உடல் பாவம் – இயக்கம் மிகுதல் – பூரித்தல் பரந்து விரிக்கப்பட்ட பஞ்சு இழைபிசகா நூலாகும். உள்ளே உடலியக்கம் கண்டு அங்கு அறுந்த நூலாம் வாசியைப் பிணைப்பேன். இஞ்ஞனம் உடலினுள் உயிர்மூச்சைப் பிணைக்கின்ற சாம்புவன் (சுடலை காப்போன், வெட்டியான்) [...]

ஞானம் எட்டி-23

ஞானம் எட்டி-23 23. திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச் ……. சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டி மறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி ……. மதனகலி யாணதிரு வல்லி மாது வரையெழுந்த பதினெட்டாங் கோட்டின் மேலு …….. மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றி கரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த …… கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே. ஏழு திரைச் சீலைகளைக் கடந்து, அதற்குமேலுள்ள பெரிய பாழ்(ஆகாயம், சூனியம், வெற்றிடம்) தாண்டி, சாகாக்காலும் வேகாத் தலையுந்தாண்டி, மறை புகுந்து [...]