Archive for 'விவேக சிந்தாமணி'
அன்பற்ற அறுசுவை உண்டி பாழ்
விவேக சிந்தாமணி – 2.58 ************************************ கெட்டசாறு தவிடுகஞ்சி கிருமியுண்ட மாவறைக் —–கீரைவேர் தெளிந்தமோர் முறிந்தபாகு கிண்டுமா இட்டசோறு கொழியலுப் பிடாதபுற்கை யாயினும் —–எங்குமன்ப தாக நுங்க இன்பமாயிருக்குமே பட்டபாகு பசுவினெய் பருப்புமுக் கனிக்குழாம் —–பாளிதங்க டாளிதங்கள் பண்ணி காரவகையுடன் அட்டபாற் குழம்புகன்ன லமுதமோடு முதவினும் —–அன்பினோ டளித்திடாத வசனமென்ன வசனமே. மனதில் அன்பில்லாது ஒருவர் மற்றவருக்கு இடும் சுண்டக்காய்ச்சிய பால், பசுவின் நெய், வேகவைத்த பருப்பு, முக்கனி, குழம்பு வகைகள், தாளித்த உணவு வகைகள், அப்பங்கள், [...]
Posted: September 23rd, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
இறைவனை அடையத் துணை யார்?
விவேக சிந்தாமணி – 2.57 *********************************** அன்பிலா நெஞ்ச மரும்பிணி யெனவு —–அள்விலாப் பகைநமக் கெனவுந் துன்பமார் சோக மோகமே முதலாந் —–துயரெலாம் விளைநில மெனவும் இன்பவீ டெய்திடற்கிடை யூறா —–மிருளுமென் றியம்புவார் பெரியோர் துன்பிலா விறைவர்க் கன்பிலா நெஞ்சே —–துணையிலை துணையிலை யெனக்கே. அரும் – தீர்தற்கரிதாகிய ஆர் – நிறைந்த சோகம் – சோம்பல் உலகில் முன்னேறும் வழிகளை உண்மையாக அறிந்த பெரியோர்கள், கடவுளிடத்தே அன்பில்லாத மனமானது தீர்தற்கரிதாகிய நோய் எனவும் நமக்கு அளவற்ற [...]
Posted: September 22nd, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: 2
தலைவைத்துப் படுப்பது எந்த திசையில்?
விவேகசிந்தாமணி – 2-56 ********************** இணையிறன திலிலொருவன் கீழ்த்திசையிற் …..றலைவைக்க வினிய மாமன் மணிதிகழ்பொன் னெடுமாடத் துறைந்திடிற்றென் …..றிசையதனில் வைக்க வேண்டும் அணிபெறுவேற் றூருறையிற் குடதிசையிற் ……சாரவைக்க அடுத்தெப் போதும் உணர்வின்றி யுத்தரத்தே தலைவைத்துத் …..துயில்புரித லொண்ணா தாமால். இணையில் – ஒப்பற்ற மணிதிகழ் – இரெத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன் – பொன்னால் ஆகிய நெடு – நீண்ட அணிபெறு – அழகைப் பெறும் சார – பொருந்த உத்தரம் – வடக்கு ஒரு மனிதன் தன்னுடைய [...]
Posted: September 13th, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: 2

