Archive for 'விவேக சிந்தாமணி'
விவேக சிந்தாமணி – 99
99. தடாரி தண்ணுமை திண்டிமஞ் சல்லரி இடக்கை
படாது கூடியே யொலித்திடல்போல இப்பாரில்
விடாத நாணகன்று அன்னிய புருடனை விழைந்தே
அடாதுசெய்த மங்கையர்வசை யொலித்திடு மன்றே.
இவ்வுலகில் நாணமின்றித் தன் கணவனை விட்டு வேறொருவனை விரும்பிக் கூடும் மங்கையரைப் பற்றிய பழிச் சொற்கள்(அவதூறு) அவர்கள் எவ்வளவு இரகசியமாக வைத்து இருப்பினும் பேரிகை, திரிகை ஆகிய பேரிரைச்சல் தரும் இசைக்கருவிகள் முழங்கினால்போல் எங்கும் பரவி ஒலித்திடும்.
Posted: February 15th, 2009 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
விவேக சிந்தாமணி – 129
129.தண்டுல மிளகின் றூள்புளியுப்பு தாளிதம் பதார்த்தமிதேஷ்டம்
தாம்புநீர் தோற்ற மூன்றுகோ லாடை சக்கிமுக்கி கைராந்தல்
கண்டங் காண்பான் பூசை முஸ்தீபு கமுற்குடை யேவல் சிற்றுண்டி
கம்பளியூசி நூலாடைக்கா பிலையை கரண்டகங் கண்டமேற் றங்கி
துண்டுமூறி யகாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத் திருத்தித் தொகுத்து பலவினி மமைத்துப்
பெண்டுகடுணையோ டெய்துவர் கன்னாய் பெருநிலை நீர்நிழல் விறகு
பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே.
அரிசி, மிளகுப் பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித்த காய்கறி, வடகம், கயிறு, தண்ணீர், ஊன்றுகோல், ஆடைகள், [...]
Posted: February 12th, 2009 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
விவேக சிந்தாமணி – 128
128. காமமே குலத்தினையும் நலத்தினையும் கெடுக்கவந்த களங்கம்
காமமே தரித்திரங்க ளனைத்தையும் புரட்டி வைக்குங்கடாரம்
காமமே பரகதிக்குச் செல்லாமல் வழியடைக்குங் கபாடங்
காமமே யனைவரையும் பகையாக்கிகழுத்தறியுங் கத்திதானே.
காமமே, குல நெறியையும் நன்மையையும் கெடுக்கும் களங்கம்; வறுமைகள் அனைத்தையும் கொட்டி வைக்கும் பொக்கிடம்; முக்தி வழியை அடைத்துள்ள கதவு; அனைவருக்குள்ளும் பகை உண்டாக்கி கழுத்தை அறுக்கும் கத்தி.
Posted: February 12th, 2009 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: none
