Archive for 'பிரபுலிங்க லீலை'
பிரபுலிங்க லீலை – 2.45
வாணாசுரனும் பானுகம்பனும் பேரொளி யுண்டாக்குதல்
*************************************************
2.45 பெய்யு மாமழை முகிலெனப் பெரியவாய் முழவம்
துய்ய மாமதி அனையவெண் சுரிமுகச் சங்கம்
ஐய வாணனும் பானுகம் பப்பெய ரவனும்
கையும் வாயுமொத் ததிர்த்தனர் செவிகரங் கவிழ்ப்ப.
முழவம் – குடமுழா என்னும் வாத்தியம்.
துய்ய- களங்கமற்ற.
சுரிமுகச் சங்கம் – சுழிந்த முகங்களையுடைய சங்கம்.
ஐயவாணன் – அழகிய வாணாசுரன்.
அதிர்த்தனர் – முழக்கினர்.
செவிகரம் கவிழ்ப்ப – காதுகளைக் கையினாலே மூடிக் கொள்ள.
பெரிய மழை பொழியவைக்கும் மேகங்கள் போன்ற வாயுடையது முழவம். வெண்ணிற முழுமதியென வெண்மை நிறத்தையுடைய சுழிபோல் வளைந்த முகங்களையுடைய [...]
Posted: February 10th, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
பிரபுலிங்க லீலை – 2.44
2.44 படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண்
முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன்
அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக்
கடிகொள் மாலையம் பிரம்பொடு திரிந்தனன் களித்து.
படி – நிலம்.
பதம்படு – திருவடிகளிலே படுகின்ற,
ஒண்முடி – ஒளிபொருந்திய மணிமுடிகள்.
கழல்-அடி.
கடிகொள் – நன்மணத்தைக் கொண்ட.
படிகொள் மாமுடிக் கங்கணத்து இறை – பூமியைத் தாங்கிய பெரிய தலையையுடைய ஆதிசேடனாகிய பாம்புக் கங்கணத்தையுடைய இறைவன் (சிவன்.)
நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்
இறைவன் நிலவுலகைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்பையே காப்பாக அணிந்தவர். அத்தகைய இறைவனை வணங்கவருவார் [...]
Posted: February 7th, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: 2
பிருங்கி முனிவர் மகிழல்
2.43 ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம்
மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல்
தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப்
போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன்.
ஊன்று – உறுதியாகத் தாங்கப்பெற்ற.
வயிராகம் – வைராக்கியம், உறுதி.
முறுவல் – புன்னகை.
புனிதன் – தூயோன்.
ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் பிருங்கி முனிவன். அ·து அரனுக்கு முறுவலை விளைத்ததாம்.
Posted: November 22nd, 2009 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
