ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Archive for 'பிரபுலிங்க லீலை'

பிரபுலிங்க லீலை – 2.45

வாணாசுரனும் பானுகம்பனும் பேரொளி யுண்டாக்குதல்
*************************************************
2.45 பெய்யு மாமழை முகிலெனப் பெரியவாய் முழவம்
துய்ய மாமதி அனையவெண் சுரிமுகச் சங்கம்
ஐய வாணனும் பானுகம் பப்பெய ரவனும்
கையும் வாயுமொத் ததிர்த்தனர் செவிகரங் கவிழ்ப்ப.
முழவம் – குடமுழா என்னும் வாத்தியம்.
துய்ய- களங்கமற்ற.
சுரிமுகச் சங்கம் – சுழிந்த முகங்களையுடைய சங்கம்.
ஐயவாணன் – அழகிய வாணாசுரன்.
அதிர்த்தனர் – முழக்கினர்.
செவிகரம் கவிழ்ப்ப – காதுகளைக் கையினாலே மூடிக் கொள்ள.
பெரிய மழை பொழியவைக்கும் மேகங்கள் போன்ற வாயுடையது முழவம். வெண்ணிற முழுமதியென வெண்மை நிறத்தையுடைய சுழிபோல் வளைந்த முகங்களையுடைய [...]

பிரபுலிங்க லீலை – 2.44

2.44 படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண்
முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன்
அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக்
கடிகொள் மாலையம் பிரம்பொடு திரிந்தனன் களித்து.
படி – நிலம்.
பதம்படு – திருவடிகளிலே படுகின்ற,
ஒண்முடி – ஒளிபொருந்திய மணிமுடிகள்.
கழல்-அடி.
கடிகொள் – நன்மணத்தைக் கொண்ட.
படிகொள் மாமுடிக் கங்கணத்து இறை – பூமியைத் தாங்கிய பெரிய தலையையுடைய ஆதிசேடனாகிய பாம்புக் கங்கணத்தையுடைய இறைவன் (சிவன்.)
நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்
இறைவன் நிலவுலகைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்பையே காப்பாக அணிந்தவர். அத்தகைய இறைவனை வணங்கவருவார் [...]

பிருங்கி முனிவர் மகிழல்

2.43 ஊன்று ஞானமோ டுயர்வயி ராகநல் லொழுக்கம்
மூன்று காலெனக் கொண்டான் முகத்திள முறுவல்
தோன்று மாறுநின் றாடினன் சுடரவன் இருளைப்
போன்று மாயையைத் தொலைத்திடு பிருங்கியென் புனிதன்.
ஊன்று – உறுதியாகத் தாங்கப்பெற்ற.
வயிராகம் – வைராக்கியம், உறுதி.
முறுவல் – புன்னகை.
புனிதன் – தூயோன்.
ஞானம், வைராக்கியம், நல்லொழுக்கம் இவை மூன்றும் கால்களாகக் கொண்டு, முகத்தில் இளஞ் சிரிப்பு தோன்றும்படி, இருளை அழித்துக் கதிரவன் வருவதுபோல் மாயையை அழித்து ஆங்கே நின்று ஆடினன் பிருங்கி முனிவன். அ·து அரனுக்கு முறுவலை விளைத்ததாம்.