Archive for 'பிரபுலிங்க லீலை'
பிரபுலிங்க லீலை – 4.6 to 4.10
பிரபுலிங்க லீலை – 4.6 ********************** சடை பின்னிவிடுதல் 4.6 மார வேள்சிலை வளைந்திடப் பூட்டிய வண்டு நாரி யோர்தலை நெகிழ்த் துவிட் டெனவொரு நாரி கார வாமலர்க் குழற்சடை கைபுனைந் தியற்றி வீர வேனெடுங் கண்ணிதன் முதுகுற விடுத்தாள் சிலை – வில். நாரி – நாணி. ஓர் தலை – ஒரு பக்கம். நெகிழ்த்து விட்டென – சுழற்றிவிட்டாற் போன்ற. ஒரு நாரி – ஒரு வண்ண மகள். கார் அவாம் – முகிலும் [...]
Posted: May 5th, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
பிரபுலிங்க லீலை – 4.1 to 4.5
4. மாயை பூசை கதி ******************** இக்கதியில், மாயை படுக்கையைவிட்டு எழுந்து நீராடுதல், ஆடையணிதல், அணிகலச் சாலைக்குச் செல்லுதல், பலவகையான அணிகலன்களைப் பூணுதல், மதுகைநாதனைப் பூசனை புரியப் பல்லக்கில் புறப்படுதல், அவள் செல்லும் ஆரவாரம், அரிவையர் கூட்டத்தைக் கண்ட ஆடவர்கள் தன்மை, கோயிலடைந்து பூசனை புரிந்து வழிபடல், இறைவன் முன்னிலையில் தேவர்களும் வியக்கும்படியாகத் திருக்கூத்து ஆடல், ஆகிய செய்திகள் விரிவாகக் கூறப்படுகின்றன. பிரபுலிங்க லீலை – 4.1 ********************** 4.1 பதியை மேவுறுங் காதல்நெஞ் சகத்தினுட் பதித்து [...]
Posted: May 3rd, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none
பிரபுலிங்க லீலை – 3.71 to 3.74
பிரபுலிங்க லீலை – 3.71 ********************** சங்கரனே மாயைக்குத் தலைவன் என்று குரு கூறுதல் 3.71 கொங்கவிழ் தொடையினாய் கூன்கொக் கன்றுவான் கங்கையை யடைவது கடவு ளன்னமே மங்கையை யணைபவர் மனித ரல்லர்நம் சங்கர னேயிவள் தலைவ னென்றனன். தொடையினாய் – மாலை புனைந்தவனே. கூன் – வளைவு, வான் – உயர்வினையுடைய, சங்கரன் – இன்பத்தைச் செய்பவன். கொங்கவிழ் மாலையுடையவனே! கொக்கு கங்கையை அடையாது; அன்னம்தான் கங்கையை அடையும். மாயையை மணக்கப் போவது மனிதர் இல்லை; [...]
Posted: May 2nd, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: none

