ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Archive for 'பழமொழி நானூறு'

பழமொழி நானூறு – 13

பழமொழி நானூறு – 13
********************************
13.கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் – நல்லாய்
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை.
நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது வலிவு இழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை.(கல்வி இன்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை)
பழமொழிகள்
************
1.வினா முந்துறாத விடையில்லை
2.கனா முந்துறாத வினையில்லை

பழமொழி நானூறு – 12

பழமொழி நானூறு – 12
*********************
12.கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை – எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி.
நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள். கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மை உடையதெனில், நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல் ஆவதன்றி, கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.
“கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.’
பழமொழி
**********
“நாவல்கீழ்ப் [...]

பழமொழி நானூறு – 11

பழமொழி நானூறு – 11 ********************** 11.விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார் கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப் பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்துப் பட்ட மறு.
மதிப்புறம் – சந்திரனின் ஓரம்
நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாது வாழ்பவர், மாறுபட்டு எழுந்தோர்களது நூலின் கொள்கைகளைத் தம் அறிவின் வன்மையால் வென்று தலைமைப் பேறு பெற்று வாழும் அறிஞர்கள், இகழ்ச்சிக்குறிய செயல்களைச் செய்தல் சந்திரனின் மேல் விளங்கும் களங்கம் [...]