ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'பழமொழி நானூறு'

பழி வேண்டாம்

பழமொழி 400 – 5.40 ********************** கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல்தேயும் தேயாது சொல். நெடுவரை – பெரிய மலைகள் முற்றும் – சூழப்பட்ட ஆழி – கடல் வடு – பழி பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரையுடைய கடலால் சூழ்ந்த உலகிலே, மலைகள் தேய்வடையும்; பழிச்சொல் மாறாது. ஆகையால், இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை அடைவதைக் காட்டிலும் தனக்கு ஒருசிறிதும் [...]

பழமொழி 400 – 5.39

பழமொழி 400 – 5.39 ********************** தம்குற்றம் நீக்கலார் ஆகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் – எங்கும் வியனுலகில் வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல். வியன் – அகன்ற வளி – காற்று, வாதம் அறிவிலார் தாம் செய்த குற்றங்களைப் போக்காமல் பிறருடைய குற்றங்களைப் போக்கும் பொருட்டு வலியச் சென்று புகுதல், அகன்ற உலகத்திலே எவ்விடத்தும் வெள்ளாடு தனக்கு உள்ள சாரல் காற்றால் உண்டாகிய நோய் இருப்பினும் அதைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு [...]

பழமொழி 400 – 5.38

பழமொழி 400 – 5.38 ************************** நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்தது இசைக்கும் பறை. பறை – உடுக்கை, தோல் கருவி நீர்மை – ஒப்புரவு, குணம், நிலைபரம் அறிவுடையாரையே அவர் கொண்ட கருத்து தவறு எனத் தெளிவித்தல் முடியாது என்றால் அறிவு இல்லாதவரைத் தெளிவித்தல் முடியவே முடியாது. பறை முதலிய இசைக்கருவிகள் நாம் நினைத்த ஓசையை ஒலிப்பதில் தவறாது. அதுபோல அறிவுடையாரும் கொண்ட [...]