ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Archive for 'பழமொழிகள் 600'

பழமொழி 600

549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
556.வித்தைக்கு அழிவில்லை.
557.விரலுக்குத் தகுந்த வீக்கம்.
558.விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா விறகால ரெண்டு போடு
559.விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
560.விளையும் [...]

பழமொழி 600

526.மகன் செத்தாலும் சரி; மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்
527.மதி இல்லா விண்ணானேன்; மருந்து இல்லா புண்ணானேன்.
528.மனம் போல மாங்கலியம்
529.மனைவி இல்லாதவன் அரை மனிதன்
530.மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான்
531.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
532.மறைவிலே பெண்டாட்டி; மந்தையிலே அக்கச்சி.
533.மலை போல் வந்தது பனிபோல் விலகியது
534.மழைவிட்டும் தூவானம் விடாததுபோல்
535.மாடு மேய்க்கவும் வேணும்; மச்சினனுக்குப் பெண் பார்க்கவும் வேணும்.
536.மாமியா உடைச்சா மண் குடம்; மருமகள் உடைச்சா பொன் குடம்.
537.மாமியார் சாகாளோ? மனக் கவலை தீராதோ?
538.மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகன் கண்ணில் நீர் [...]

பழமொழி 600

496.பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
497.படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
498.படிக்கிறது இராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்.
499.பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
500.பத்தாம் பேறு பாடையில் வைக்கும்
501.பத்து அரிசியும் வேகவில்லை; பாவியின் ஆவி போகவில்லை.
502.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
503.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
504.பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
505.பழமொழியில் உமி கிடையாது
506.பழுத்த ஓலையைப் பார்த்து குருத்தோலை சிரித்ததுபோல்
507.பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
508.பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
509.பிள்ளையாருக்குப் பெண் தேடுவது போல்
510.பிள்ளையின் அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.
511.பிள்ளையையும் கிள்ளித் [...]