ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

விருந்தினர்கள்

Site search

Meta

Archives


Tamil Blogs Traffic Ranking
Tamil 10 top sites [www.tamil10 .com ]

Categories

Tags

Archive for 'கட்டுரைகள்'

சுதந்திரம்

தனி மனிதனின் சுதந்திரம் எது வரை? சாலையில் மனிதர்கள் அனைவரும் சாரிசாரியாய் நடக்கின்றனர். அது அவர்களின் உரிமை. மழை வருமென நினைத்து குடையை ஒருவர் கையில் கொண்டு செல்கிறார். அது அவரின் சுதந்திரம். சிறிது தொலைவு கழித்துக் கை வலிக்கிறதெனக் குடையைத் தன் கக்கத்தில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அது அவரின் சுதந்திரம். ஆனால், அச்சுதந்திரத்தின் எல்லை என்ன? கக்கத்தில் உள்ள குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான்!

கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்

அன்புடையீர், தாழைலை போட்டு “இட்லிவடை” பரிமாரிய வைரஸ் விருந்து என்னைத்திகத்து நகைக்க வைத்தது. இப்பதிவில் என்னை நேரடியாக “கோடாலி மீசைக் கண்ணாடி ஞானவெட்டியான்.” என் அழைத்தைப் பாராட்டுகிறேன். இப்பதிவு சினமுறாது, மனமுவந்துஎழுதியது. தங்களின் வருத்தம் புரிகிறது. ஏதோ தெரியாமல் வந்துவிட்டது என மன்னிப்பும் கோரியாகிவிட்டது. இன்னுமென்ன செய்ய வேண்டும். நான் உறங்கும் நேரம் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை. மதியம் 2 முத 4.30 வரை. ஓய்வு பெற்றவர்கள்தான் தொல்லை கொடுக்கவேண்டுமென்பதில்லை. [...]

திருமுழுக்காட்டு மாலை

தவத்திரு துரைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த “இட்டலிங்க அபிடேக மாலை” என்னும் ******************************** “திருமுழுக்காட்டு மாலை”. **************************** பந்தமறு அரர்மிருடர் பவருருத் திரர்கள்ஒரு பதினொருவர் மிளிர்பீடம்மேல் படியிலை ஐவகைப் படுமீசர் தாநிதம் பத்திலெண் வித்தைஇறைவர் சந்தமுறு கோமுகத்து ஐங்கலைகள் சத்திசா தாக்கியம் மூர்த்திவதனம் தட்டற்ற வட்டத்தில் ஒட்டற்ற சிற்சத்தி தாளுற்ற நாளத்திலே நந்தலற வருகோள கம்திகழ் சிதம்பரம் நற்சிகையில் நிர்ச்சூனியம் நட்டம்அற அமைகின்ற இட்டவடி வொடுநின்ற ஞானமய மோனம்நடுவோடு அந்தம்அற முந்துபர மானந்த! நீநந்த அபிடேகம் [...]