Archive for 'கட்டுரைகள்'
காலை மணி 8.30
அதிசயம்.
ஊட்டியா? கொடைக்கானலா?
இன்று காலை 8.30க்கு வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. சிம்லாவுக்கு வந்து விட்டோமா? ஊட்டியா? கொடைக்கானலா? எதிர் வீடு கூடத் தெரியாவில்லை.
இதெல்லாம் எங்கே? திண்டுக்கல்லில்தான்.
நம்ம ஊரே இப்படியிருக்க ஊட்டியும் கொடைக்கானலும் ஏனுங்க?
Posted: November 12th, 2009 under கட்டுரைகள், தமிழமுது.
Comments: 7
பூந்தியா? (இ)லட்டா?
நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு மாலை வேளையில் அவரைக்காணச் சென்றபோது, அங்கே இருவகை இனிப்புக்கள்,காரப் பணியாரம், தேனீர் கொடுத்தார்கள். அந்தப் பண்டங்களை உண்டுவிட்டு உரையாடத் தொடங்கியபோது, அவ்வில்லத்தரசி,”என்ன? எல்லாம் சுவையாக இருந்தனவா?” எனக் கேட்டார்கள். “ஆம், அம்மணி; ஆயினும் இனிப்பில் சுவை வேறுபாடு ஒன்றுமே தெரியவில்லையே” என்றேன். அதற்கு அவர்கள்,”எங்கள் இல்லத்திற்கு வருபவர்களுக்கு ஒரு இனிப்பு வைப்பது பழக்கமல்ல; இருந்ததோ பூந்தி ஒன்றுதான்; அதையே உருண்டையாகப் பிடித்து வைத்தேன்” என்றார்கள்.
இந்நிலைதான் [...]
Posted: April 18th, 2008 under கட்டுரைகள், தமிழமுது.
Comments: 16
சுதந்திரம்
தனி மனிதனின் சுதந்திரம் எது வரை?
சாலையில் மனிதர்கள் அனைவரும் சாரிசாரியாய் நடக்கின்றனர். அது அவர்களின் உரிமை.
மழை வருமென நினைத்து குடையை ஒருவர் கையில் கொண்டு செல்கிறார். அது அவரின் சுதந்திரம்.
சிறிது தொலைவு கழித்துக் கை வலிக்கிறதெனக் குடையைத் தன் கக்கத்தில் வைத்துக்கொண்டு நடக்கிறார். அது அவரின் சுதந்திரம்.
ஆனால், அச்சுதந்திரத்தின் எல்லை என்ன?
கக்கத்தில் உள்ள குடை பின் நடந்து வருபவரின் கண்ணைக் குத்தாத வரைதான்!
Posted: April 18th, 2008 under கட்டுரைகள், தமிழமுது.
Comments: 10
